search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95209"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,024-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 24-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 503 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து 68 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,968-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டு வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.35,968-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,496 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டதால் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் கடந்த 20-ந்தேதி பவுன் ரு.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதற்கிடையே தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் குறைந்தபடியே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரு.768 குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரு.36 ஆயிரத்து 136-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 517-க்கும் விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்தபடி உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.67 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.67.60-க்கு விற்கிறது.

    தங்கம் விலை கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர் சரிவு நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மேலும் விலை குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
    கொடைக்கானலில் அனைத்து காய்கறிகளும் விலை உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்து வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மலைக்கிராமங்களில் விளையும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், தரைப்பகுதிகளில் விளையக்கூடிய அவரை, கத்தரி, வெண்டைக்காய், கருணை கிழங்கு, தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான காய்கறிகள் ரூ.100க்கும் அதிகமாக இருந்ததால் சாமானிய மக்கள் அதனை வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளான கத்திரிக்காய் கிலோ ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, பீன்ஸ் ரூ.120, தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.120, பாகற்காய் ரூ.120, பட்டர் பீன்ஸ் ரூ.180, சிவப்பு பவளபீன்ஸ் ரூ.180, குடை மிளகாய் ரூ.180, பெங்களூர் தக்காளி ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் இந்த திடீர் விலை ஏற்றத்தினால் அவதியடைந்து குறிப்பிட்ட சில காய்கறிகளை சிறிதளவு மட்டும் வாங்கிச் சென்றனர். மேலும் வாரச்சந்தையில் முறையாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்கறிகள் விலை உயர்வுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.
    நெல்லை:

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக காய்கறிகள் விளைச்சல் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்டவற்றில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வந்து சேரும். ஆனால் தொடர்மழையால் அங்கும் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. வெள்ளை நிற கத்திரிக்காய் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. பச்சை நிற கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

    இது தவிர அவரைக்காய் கிலோ ரூ.130-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட் கிலோ ரூ.70 முதல் 90 வரையும், புடலைங்காய் ரூ.75-க்கும் விற்கப்பட்டது.

    பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் 50 வரை தரத்திற்கேற்ப விற்கப்பட்டது. முருங்கைக்காய் ரூ.75-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50 வரையிலும் விற்பனையானது.

    இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரியான சிவா கூறுகையில், பாளை மார்க்கெட்டுக்கு தென்காசி மாவட்டத்தை அடுத்து மதுரை மார்க்கெட்டில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரும். சில நேரங்களில் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வரத்து இருக்கும்.

    மதுரையில் இருந்து வரும் தக்காளிகள் 28 கிலோவாக ஒரு பெட்டியில் போடப்பட்டு மார்க்கெட்டுக்கு வரும். இவற்றின் விலை இன்று ரூ.3,200 ஆக இருக்கிறது. இதே போல் ஆந்திராவில் இருந்து 15 கிலோ ஒரு பெட்டியில் போடப்பட்டு ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாளை மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வந்துள்ளதால் ரூ.120 வரை விற்கப்படுகிறது. மதுரையில் இருந்து கொள்முதல் செய்தால் ரூ.150 வரையிலும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

    இதனால் வியாபாரிகளின் லாபத்தையும் சேர்த்து விற்பனை செய்யும் போது காய்கறிகளின் விலை அதிகரித்து விடுகிறது என்றார்.
    நுகர்வு குறைவு, வெளி மாநிலத்தில் முட்டை விலை சரிவு காரணமாக இன்று முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.4.55 ஆக இருந்தது. பின்பு 5-ந்தேதி ரூ.4.65 ஆகவும், 7-ந்தேதி விலை ரூ.4.70 ஆகவும் இருந்தது. பின்பு விலை குறைந்து 11-ந்தேதி ரூ.4.55 ஆனது.

    அதன்பிறகு 16-ந்தேதி ரூ.4.60 ஆகவும், 18-ந்தேதி ரூ.4.65 ஆகவும் உயர்ந்தது. இந்த நிலையில் நுகர்வு குறைவு, வெளி மாநிலத்தில் முட்டை விலை சரிவு காரணமாக இன்று முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்-ரூ.4.75, சென்னை-ரூ.4.90, சித்தூர்-ரூ.4.83, மும்பை-ரூ.4.85, மசூரு-ரூ,.4.55 ஆக உள்ளது.

    தொடர் மழையால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததாலும், கார்த்திகை மாதம் அய்யப்ப சீசன் தொடங்கியதாலும் விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாகவே முட்டை விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை பின்பு ரூ.4.65 ஆகவும், தொடர்ந்து ரூ.4.70 ஆகவும் உயர்ந்தது.

    கடந்த 11-ந்தேதி முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ.4.55 ஆனது. பின்னர் கடந்த 15-ந்தேதி 5 காசுகள் உயர்ந்து ரூ.4.60 ஆனது. இன்று விலை மேலும் 5 காசு அதிகரித்து ரூ.4.65 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மற்ற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்தில் ரூ.4.75, பெங்களூருவில் ரூ.4.70, சென்னையில் ரூ.4.90, மும்பையில் ரூ.5.09, மைசூரில் ரூ.4.65 ஆகவும் உள்ளது.

    தொடர் மழையால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததாலும், கார்த்திகை மாதம் அய்யப்ப சீசன் தொடங்கியதாலும் விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
    தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.

    இதனால் நெல்லை, தென்காசி பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட செடிகள் நீரிலேயே மூழ்கி அழுகி விட்டன.

    இந்த தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து அதிகரிக்க தொடங்கிய காய்கறிகளின் விலை இந்த வாரம் மேலும் உயர்ந்துள்ளது.

    நெல்லையில் இன்று தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்தரிக்காய் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பாளை மார்க்கெட்டில் வெள்ளை நிற கத்தரிக்காய் ரு.90 வரையிலும், மற்ற நிறத்திலான கத்தரிக்காய் ரூ.70 வரையிலும் விற்பனையாகிறது.

    இதேபோல் கேரட் ரு.60 முதல் 100 வரையிலும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த தோட்டங்களும் மழை வெள்ளத்தால் நாசமாகி விட்டது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக 70 லாரிகளில் வரும் தக்காளி தற்போது பாதியாக குறைந்து விட்டது. கடந்த ஒரு வாரமாகவே இது நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.72க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறியதாவது :-

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. விலை உயர்வு காரணமாக கடந்த 2 நாட்களாக தக்காளி விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை சமீபத்தில் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சில நாட்களாகவே விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.37,272-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,625 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஒரு பவுன் ரூ. 37 ஆயிரத்து 200-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 650 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.71 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,240-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை நேற்று முன்தினம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36 ஆயிரத்து 976-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 240-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 655 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராமம் வெள்ளி ரூ.71. 70-க்கும் விற்றது.
    ×