search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99470"

    தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

    * தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

    * வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

    * குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

    * வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

    * படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

    * தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

    * தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
    ஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில் காவிரிப் படுகையும் ஒன்றாகும்.

    புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரை நிலப் பகுதியில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கடலில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவும் காவிரிப் படுகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையை குறிவைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. நெடுவாசலில் 2006-ம் ஆண்டே பூமிக்கடியில் துளையிடப்பட்டது. இதனால் 21 லட்சம் ஏக்கர் நிலம் உபரி நிலமாக மாறி விடும் என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தை கைவிட வைத்தனர்.

    என்றாலும் காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து எண்ணெயையும் இயற்கை எரிவாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டா உள்ளடக்கிய காவிரிப் படுகை முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளை தற்போது மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜன் வாயு மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப் பொருளாகும். இந்த ஹைட்ரோ கார்பன் வாயு ஆக்ஸிசன் உதவியுடன் எரி பொருளாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது.

    பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டு மொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். எனவே நாட்டில் எரிபொருள் தேவையை முழுமையாக தீர்ப்பது ஹைட்ரோ கார்பன்கள் தான்.

    இதற்கு முன்பு தமிழ் நாட்டில் காவிரிப் படுகைப் பகுதியில் சிறிய அளவில்தான் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

     


    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது. இதன் முதல் கட்டப் பணியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாட்களாகும்? பூமிக்குள் செலுத்தப்படும் வேதிப்பொருட்களை பாதுகாப்பது எவ்வாறு? கழிவுப் பொருட்களை அகற்றுவது எவ்வாறு? என்பது பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு சமீபத்திய உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

    குறிப்பாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதால் பொதுமக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும் இது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்கவும் வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய வன மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கி இருப்பதால் வேதாந்தா நிறுவனம் உடனடியாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் பணிகளைத் தொடங்கும்.

    காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு-1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு-2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.

    இந்த 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும். நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.

    சில ஹைட்ரோ கார்பன் கிணறுகள் மக்கள் அடர்த்தியாக, அதிகம் வாழும் பூம்புகார், வேளாங்கண்ணி, நாகை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அமைய உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள பிச்சாவரம் பாம்குரோவ் காடுகளின் மிக, மிக அருகில் அதாவது பிச்சாவரம் பாம்குரோவ் காட்டுப் பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் எண்ணெய் கிணறுகள் வர உள்ளன.

    விழுப்புரத்தில் தொடங்கி புதுச்சேரி வரையிலான முதல் பிரிவு திட்டத்தின்படி மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதில் 1654 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வங்க கடலில் அமைகிறது. மீதமுள்ள 141 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விழுப்புரம் பகுதியில் 139 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். புதுச்சேரி பகுதியில் 2 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும்.

    இரண்டாவது பிரிவில் 2574 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாகையில் 142 சதுர கிலோ மீட்டருக்கும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் பட உள்ளது. மீதமுள்ள 2393 சதுர கிலோ மீட்டர் பகுதி கடலில் அமைகிறது.

    274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே கிணறு அமைக்கும் பணிக்கான ஆய்வறிக்கையை அது மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் காவிரிப் படுகையில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கும் பணிகள் தொடங்கி விடும்.

    அடுத்த 15 ஆண்டுகளுக்குள் காவிரிப் படுகையில் உள்ள பெரும்பாலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரிக்க ரூ.106 கோடி செலவாகும் என்றும் கிணறு தோண்ட தலா ரூ.49 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையில் இதற்கு முன்பு இயற்கை எரி வாயும், கச்சா எண்ணெயையும் மட்டுமே எடுக்கப்பட்ட வந்தது. தற்போது மிக, மிக ஆழமான பகுதிகளில் உள்ள ஷேல் எரிவாயுவை எடுக்க முடிவு செய்துள்ளனர். காவிரிப் படுகையில் ஷேல் எரிவாயு மிக, மிக அதிக அளவில் இருப்பது நவீன ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஷேல் எரிவாயு என்பது பூமியின் மிக ஆழமான பகுதிகளில் களி மண் பாறைகளில் உள்ள துளைகளில் தங்கி இருக்கும் வாயுவாகும். இந்த வாயுவை வெளியில் எடுப்பது சாதாரணமான பணி அல்ல.

    78 விதமான வேதிப் பொருட்களை தண்ணீருடன் கலந்து அதை 6 டன் வேகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செலுத்தினால்தான், அந்த ஷேல் வாயுக்கள் களிமண் பாறை துளைகளில் இருந்து வெளியேறி வரும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி டெல்டா பகுதி மக்கள் ஏற்கனவே குடிநீரே கிடைக்காமல் தவித்தப்படி உள்ளனர். விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் தண்ணீரை எடுத்தால் மிகப் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதுமட்டுமின்றி பூமிக்கு கீழ் துளைகளில் உள்ள வாயுவை அகற்றும் போது கடல் நீர் புகுந்து நல்ல நிலம் உலர் நிலமாக மாறும். 78 வகையான வேதிப் பொருட்களை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபடும். அது புற்று நோயை மிக எளிதாக வரவழைக்கும் என்கிறார்கள்.

    காவிரிப் படுகையின் பூமி சல்லடையாக துளைக்கப்படும் பட்சத்தில் நில நடுக்கம் அபாயம் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் பணி புரிய லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் குடியேற வாய்ப்புள்ளது. இது தமிழர்களின் கலாச்சாரத்தை உடைக்கும் வகையில் மாறும்.

    தமிழர்களின் ஒட்டு மொத்த வாழ்வாரத்தையே இந்த திட்டம் அழித்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே காவிரிப் படுகையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    முதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.

    திராட்சை எண்ணெய்:

    இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.

    நல்லெண்ணெய்:

    உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகள்:

    கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர், கார்போக அரிசி, ரோஸ் மேரி இலை, போன்ற மூலிகைகளை இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ கண்ணாடி குப்பியில் நிறைத்து நல்ல வெயிலில் வைத்து நிறம் நன்றாக மாறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி மிகவும் நேர்த்தியாக வளரவும் உதிராமலும் இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

    இந்த எண்ணெயுடன் திருநீற்று பச்சிலை, தைலமர எண்ணெய், இஞ்சி, பூண்டு எண்ணெய்களை சிறிது கலந்து தேய்த்தால் பேன், பொடுகு, புழுவெட்டு தொல்லைகள் சரியாகிவிடும். இளநரையை தடுக்க இத்துடன் பாதாம், ஆப்ரிகாட், முருங்கை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தினால் முழுமையான பலன் கிடைக்கும்.


    அக சுரப்பிகளின் குறைகளால் முடியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய: கருஞ்சீரகம், திரிகடுகம், கரிசலாங்கண்ணி, வல்லாரை, முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இவைகளை கலந்து கசாயம் செய்து அல்லது இத்துடன் தேங்காய், பேரிச்சை, திராட்சை கலந்து சாறு செய்து சாப்பிட்டால் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து கிடைப்பதுடன், முடி நன்றாகும். மூளை நன்றாக வேளை செய்யும், மனம் அமைதியுறும். செரிமான உறுப்புகள் மிகச்சரியாக இயங்கும்.

    கருஞ்சீரக எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

    கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள் உங்கள் முகப்பொலிவை பார்த்து. இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்தினால் முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.
    கதிராமங்கலம் போராட்ட வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் ஆஜரானார். #kathiramangalamprotest #professorjayaraman

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தது.

    இந்த குழாய்களால் விளைநிலங்கள் பாதிப்படைவதாக கூறி மயிலாடு துறையை சேர்ந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டடைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதையடுத்து பேராசிரியர் ஜயராமன் உள்பட சிலர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தவிட்டார். மீதி 5 வழக்குகளை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பது கண்டிக்கதக்கது.

    வரும் பிப்ரவரி மாதம் மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kathiramangalamprotest #professorjayaraman

    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரன் ஸ்டார் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. கடந்த 14-ந் தேதி இந்த கப்பல் துறை முகத்துக்கு வந்து சேர்ந்தது.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இணைப்பு குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கப்பலில் நிலை தளத்தின் மீது கொட்டியது. பின்னர் அங்கிருந்து வழிந்து கடலில் கலந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் செல்லும் குழாயை அடைத்தனர். இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறவில்லை.

    எனினும் சுமார் 2½டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கப்பலை சுற்றி எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்  மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெயை அகற்ற வசதியாகவும் கப்பலை சுற்றிலிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டன.

     


    துறைமுக தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கடலோ பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணூர் துறை முகத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    எண்ணெய் படலத்தை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆகாய மார்க்க மாகவும், கடலில் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையில் பரவி இருக்கிறது என்று கணக்கிடப்பட்டது. இதில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் பரவியிருப்பது தெரிய வந்தது. துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எண்ணெயை உறிஞ்சும் நான்கு பெரிய ஸ்கிம்பர் கருவியை கடலில் இறக்கி எண்ணெய் படலத்தை உறிஞ்சி வருகின்றனர். இன்று 2-வது நாளாக பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மிதவை தடுப்புகள் போடப்பட்ட இடத்தை சுற்றிலும் படகுகள் மூலம் துறைமுக ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்து வருகின்றன. கடலோர காவல் படை படகுகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. உறிஞ்சி எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பேரல்களில் சேகரிக்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மாசு கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹேரேதார்’ என்ற கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து துறைமுக ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, “கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. மிதவை போடப்பட்ட இடத்திற்குள்ளேயே எண்ணெய் மிதக்கிறது.

    மேலும் அது பரவ வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் கடலில் மாசு ஏற்படாது.  50 சதவீத எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.  இன்று மாலைக்குள் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதில் எண்ணூரில் இருந்து நீலாங்கரை வரையிலும் பரவியிருந்தது. இதனால் கடலில் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2 ஆண்டுகளில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணை கொட்டு வது இது 2-வது முறை ஆகும். #EnnorePort  #OilSpill

    தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.
    தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

    தேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

    ஆமணக்கு எண்ணெய்: முழங்கால் வலி உள்ளவர்கள் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ்  செய்யவும்.



    கடுகு எண்ணெய்: மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு  வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

    தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.

    ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே  வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

    தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.

    சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. #pmmodi #Indianoilcompany
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

    இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

    இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்,  நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி பிரதமர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும். #pmmodi #Indianoilcompany
    பாமாயில் எண்ணெயை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன.

    குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

    பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    உடல் எடை குறைப்பதற்கு முயற்சிப்பவரா நீங்கள். பாமாயிலின் அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிபடியாக நீக்கும்.

    பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும். எனவே, இது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, வளர்சிதை நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.

    பாமாயிலை சமைக்கும் போது அது ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.



    பரம்பரை வியாதிகளான அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை இருந்தால் பாமாயிலை தவிர்த்துவிடுங்கள். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், பாமாயில் உடலில் கொழுப்புச் சத்தை அதிகரித்துவிடும் என்பது தான்.

    பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு அற்புதங்களைச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

    பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமநிலையற்ற பாமாயிலால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது.

    பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமாயிலை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும். மேலும், இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆன்ஸிடன்டாகும்.

    வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு உங்களுக்கு இருந்தால் பாமாயிலை எந்த தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். தினசரி உணவில் பாமாயிலை சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும். அது பாமாயிலின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று.
    ×