என் மலர்
நீங்கள் தேடியது "SLvAFG"
- ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. தொடரில் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ஜூன் 4-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஜூன் 7-ம் தேதியும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்று வீரர்களாக 4 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்:
ஹஷ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அமகது, அப்துல் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பரித் அகமது மாலிக்.
மாற்று வீரர்கள்: குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்.
- கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்க - கருரத்ணே களமிறங்கினர். 4 ரன்கள் இருந்த போது கருரத்ணே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 11 ரன்னிலும் மேத்யூஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.
84 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து அசலங்கா - டி செல்வா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்திய டி செல்வா 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சனகா 17 ரன்னிலும் தசுன் ஹெமந்தா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.
பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 268 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அம்பாந்தோட்டை:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா பொறுப்புடன் ஆடி 91 ரன்கள் எடுத்தார். டி சில்வா 51 ரன்னும் எடுத்தார். நிசாங்கா 38 ரன் சேர்த்தார்.
இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி 98 ரன்னில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
- முதலில் ஆடிய இலங்கை 323 ரன்கள் குவித்தது.
- குசால் மெண்டிஸ், கருணரத்னே அரை சதமடித்தனர்.
அம்பாந்தோட்டை:
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 52 ரன்னிலும் அவுட்டாகினர். சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும், நிசங்கா 43 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷாகிடி 57 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் அரைசதம் அடித்து 54 ரன்னிலும் அவுட்டாகினர். ரஹ்மத் ஷா 36 ரன்னில் வீழ்ந்தார்.
அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம்ழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்தியும், 29 ரன்னும் எடுத்த தனஞ்செய டி சில்வா ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது.
லாகூர்:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா 41 ரன்னும், அசலங்கா 36 ரன்னும், துனித் வெல்லேலகே 33 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. 37.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்கள் விளாசினார். ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார்.
கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.
இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்டும், துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 62.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்துள்ளது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
- முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.
மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.
கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.
- ஆப்கானிஸ்தான் வீரர் இம்ராஹிம் ஜட்ரன் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார்.
- பிரபாத் ஜெயசூர்யா மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பில் நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அசிதா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மேத்யூஸ் (141), தினேஷ் சண்டிமல் (107) ஆகியோரின் சதங்களால் 439 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இம்ராஹிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 114 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் 241 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.

சதம் அடித்த மேத்யூஸ், சண்டிமல்
அதன்பின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 55 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 56 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரபாத் ஜெயசூர்யா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
முதல் நாள் (பிப்ரவரி 2-ந்தேதி): ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 80/0
2-வது நாள் (பிப்ரவரி 3-ந்தேதி): இலங்கை 410/6
3-வது நாள் (பிப்ரவரி 4-ந்தேதி): இலங்கை முதல் இன்னிங்சில் 439 ஆல்அவுட். ஆப்கானிஸ்தான் 199/1
4-வது நாள் (பிப்ரவரி 5-ந்தேதி): ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 50/0 (வெற்றி)
- இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.