என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soft drinks shops"

    • நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • கடைகளில் பழச்சாறு, தர்ப்பூசணி ஜூஸ் விற்பனை அமோக உள்ளது.

    நெல்லை:

    ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாகவே இந்த மாதம் தொடக்கத்திலேயே அதிகளவு வெயில் வாட்டி வந்தது.

    சுட்டெரிக்கும் வெயில்

    நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. அத்தி யாவசிய தேவை மற்றும் பணிகளுக்காக செல்வோர் குடை பிடித்தபடி சென்று வருகிறார்கள்.

    பகலில் இப்படி என்றால் இரவில் வீட்டிற்குள் எத்தனை மின் விசிறிகள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிலர் வீட்டின் முற்றத்திலும், மாடிகளிலும் தூங்கி வருகிறார்கள்.

    கோடை மழை

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வளி மண்டல சுழற்சி காரணமாக மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இதனால் கடும் வெயிலால் தவித்து வந்த மக்கள் குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதிகளில் கடும் வெயில் வாட்டியது. கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொது மக்கள் குளிர்பானங் களை நாடிச்செல்வது வழக்கம். இதையொட்டி அந்த கால கட்டத்தில் சாலை யோரங்களில் புதிதாக தற்காலிக கடைகள் அதிகளவில் தோன்றுவது வழக்கம்.

    குளிர்பான விற்பனை

    அதன்படி நெல்லை, டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் புதிது புதிதாக குளிர் பான கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கடை களில் பழச்சாறு, குளிர் பானங்கள், தர்ப்பூசணி ஜூஸ், பதநீர் விற்பனை அமோக உள்ளது.

    இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளில் வருபவர்கள், பாதசாரிகள் குளிர்பான கடைகளை பார்த்ததும் சற்று இளைப்பாரி பழசாறு, நுங்கு, பதநீர் உள்ளிட்டவை களை அருந்தி செல்கிறார் கள்.

    இதே போல் கம்பு, சோளம், ராகி கூழ் ஆகிய வையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப் படுகிறது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப் பட்டுள்ளது.

    பழச்சாறு

    இதே போல் பழக்கடை களிலும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்டவை களை பொதுமக்கள் அதிக ளவு வாங்கி செல்கிறார்கள். பகல் நேரங்களில் அதிகளவு வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மாலை நேரங் களில் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார்கள்.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம், பாளை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் இன்று விடுமுறை நாளை யொட்டி காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு உற்சாகமாக விளை யாடி மகிழ்ந்தனர்.

    கொக்கிரகுளம் மற்றும் பாளை வ.உ.சி. மைதான பகுதிகளில் ஏராளமான தற்காலிக குளிர்பான கடை கள் அமைக்கப் பட்டுள்ளது. அங்கும் இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

    ×