என் மலர்
நீங்கள் தேடியது "Somavar Pradhosa"
- சிவன் கோவில்களில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
- அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், அரிசி மாவு, அபிஷேகப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர், மட்டுவார் குழலி அம்மன், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் சிவன் கோவில் ஆகிய பகுதிகளிலும் சோமவார பிரதோசத்தை ஒட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.