என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonia Gandhi"

    • யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர்.
    • சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10 மாநிலங்களை கடந்து 108-வது நாளான இன்று காலையில் தலைநகர் டெல்லிக்குள் யாத்திரை நுழைந்தது.

    டெல்லி எல்லையான பதர்பூரில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தலைமையில் காங்கிரசார் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். பாத யாத்திரை புறப்படும் போதே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுலுடன் அணிவகுத்து பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர். சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

    ராகுல் நடைபயணத்தில் சோனியா கலந்து கொள்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கர்நாடகாவில் யாத்திரை நடந்த போது கடந்த அக்டோபர் மாதம் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படியும், பின்பற்ற இயலாவிட்டால் பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வழக்கமாக ராகுல் பாத யாத்திரையில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவரை சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி யாரும் அருகில் நெருங்க முடியாத படி போலீசார் அணிவகுத்து வருவார்கள்.

    ஆனால் இன்று பாது காப்பு முறையாக செய்யாததால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் சென்ற பாதையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தார்கள்.

    இன்று இரவு செங்கோட்டை அருகே தங்குகிறார்கள். டெல்லியில் 9 நாட்கள் யாத்திரை நடக்கிறது. புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி புறப்படுகிறது.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
    • காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.

    தெக்ரி கர்வால்:

    காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

    மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:

    முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.
    • சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுக்கூட்டம், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அவர் தனது கட்சி எம்.பி.க்கள் புடைசூழ அமர்ந்திருப்பார்.

    இந்த முறை தனியாக அமர்ந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், எம்.பி.க்களும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பாத யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளச்சென்றிருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமான புறப்பாடு தாமதம் ஆனதால் அவர்கள் ஸ்ரீநகரில் சிக்கிக்கொண்டனர்.

    சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

    சோனியா காந்தியும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    சோனியா காந்தியின் அருகில் அமர்ந்திருந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவரிடம் பேசிக்கொண்டதை காண முடிந்தது.

    பின்வரிசையில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனிடம் சோனியா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி உறுப்பினர்கள் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

    அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கதா ராய், பா.ஜ.க. எம்.பி. நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய 6 பேரும் ஒன்றாக அமர்ந்திருந்ததை காண முடிந்தது.

    பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சி வித்தியாசம் பாராமல் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.

    பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது.

    • உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும்.
    • நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன் முதலில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். மாணிக்கம்பாளையம் பகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா 1½ ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்காக உழைத்திருக்கிறார். திருமகன் ஈ.வெ.ரா மறைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் கொடுத்தார்.

    நான் போட்டியிட முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விருப்பம் தெரிவித்ததால் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    ஈரோடு நகர் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டும். தற்போது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஈரோட்டில் கடந்த ஒரு வாரங்களாக கூட்டணி கட்சியினர் முத்துசாமி தலைமையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்.

    முதல் முதலாக முத்துசாமியுடன் உங்களை சந்திப்பது இங்கு தான் என்றும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நம்புகின்ற விஷயம் என்பதால் சொல்கிறேன் "பிள்ளையார் சுழியை இங்குதான் போட்டிருக்கிறேன்.

    மேலும் என்னை உங்களுக்காக உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும். நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைவதாக இருந்ததாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சீமான் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், அவர் மீது பாசம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர்.

    சீமான் எனது பாசத்திற்கு உரியவர் என்றார். மேலும் என்னை இகழ்ந்தாலும், எனது மகனை பற்றி சொன்னாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்கிறார் என எடுத்துக்கொள்வேன் என்றார்.

    • பிரதமர் மோடியின் கொள்கை, தொடர் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
    • மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு ஆங்கில பத்திரிகையில் மத்திய பட்ஜெட் குறித்து எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரை பலி கொடுத்து, தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்யும் பிரதமர் மோடியின் கொள்கை, தொடர் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. பணமதிப்பிழப்பு, தவறாக வடிவமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை அவற்றில் அடங்கும்.

    தனியார்மயமாக்கலால், விலைமதிப்பற்ற தேசிய சொத்துகள், குறிப்பிட்ட தனியார் கையில மலிவு விலைக்கு தாரைவார்க்கப்பட்டன. இதனால், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் வேலை இழந்துள்ளனர்.

    பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.யும், பாரத ஸ்டேட் வங்கியும் பிரதமரின் நண்பர்களால் மோசமாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்கப்படுகின்றன. இதனால், ஏழைகள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணம் அச்சுறுத்தலில் இருக்கிறது.

    பிரதமருக்கு பிடித்தமான தொழிலதிபர் குறித்து நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நேரத்திலும், 'விஸ்வ குரு' என்றும், 'அமிர்த காலம்' என்றும் பிரதமரும், மந்திரிகளும் முழங்கி வருகிறார்கள்.

    இந்த நேரத்தில் கருத்தொற்றுமை கொண்ட இந்தியர்கள் கைகோர்த்து, மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்க வேண்டிய கடமை உள்ளது.

    சமீபத்தில் முடிவடைந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை யாத்ரீகர்கள் நடந்தனர். வழியெங்கும் லட்சக்கணக்கானோரை சந்தித்து உரையாடினர். அனைவரும் நாட்டின் பொருளாதார சிக்கல், ஏமாற்றம் குறித்தே பேசினர்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருவாய் வீழ்ச்சி என்ற 3 வித அச்சுறுத்தல்களால் ஏழைகளும், நடுத்தர வகுப்பினரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டிய மத்திய பட்ஜெட், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்துள்ளது.

    அதனால், இந்த பட்ஜெட் ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உரிமைகள் சார்ந்த சட்டங்களின் இதயம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, 100 நாள் வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தில் கேலி செய்தார். ஆனால், கொரோனா காலத்தில் அதுதான் உதவியாக இருந்தது. தற்போது, அந்த திட்டத்துக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்துள்ளார். இதனால், கிராமப்புற தொழிலாளர்களுக்கு குறைந்தளவே வேலை கிடைக்கும்.சர்வ சிக்ஷ அபியான் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், பள்ளிகளுக்கான நிதி குறையும். மதிய உணவு நிதி குறைக்கப்பட்டதால், மாணவர்களுக்கு குறைவான அளவுதான் சத்தான உணவு கிடைக்கும். ஒருபக்கம் நிதி குறைப்பும், மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வும் சேர்ந்து ஏழைகளை நேரடியாக துன்புறுத்துகிறது. எதிர்பார்த்ததுபோல், பிரதமர் அமைதி காக்கிறார்.

    மூலதன செலவுகளுக்கான நிதி தேவைக்காக இந்த நிதியை குறைத்துள்ளனர். இருப்பினும், அந்த நிதியும் பிரதமரின் நண்பர்களுக்குத்தான் செல்லும். அதே சமயத்தில், மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய மருத்துவ துறை மூத்த டாக்டர் அருப் பாசு தலைமையிலான டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சோனியா காந்தியின்உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் குணமடைந்து வருகிறார்.

    • பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருக்கிறது.

    அதானி குழும முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை தொடர்ந்து நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பராளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்கேற்றனர்.

    பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள். அதானி குழும விவகாரத்தில் பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை வைத்தி ருந்தனர்.

    அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார்.
    • ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி தீர்ப்பு விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.

    2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார். அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

    மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி இன்று காலை சூரத் புறப்பட்டார்.

    சூரத் புறப்பட்டு செல்வதற்கு முன்பு ராகுல்காந்தியை சோனியாகாந்தி சந்தித்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று சோனியா சந்தித்தார். இதேபோல பிரியங்காவும் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

    ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வரும்போது காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள்.

    காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், இமாச்சலபிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், மேல்சபை எம்.பி. கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேல்முறையீடு மனுவில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் ரத்தாகும்.

    • எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன.
    • வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை) முறையாக அகற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

    சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த அமர்வில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், சமூக பிரிவினைகள் போன்றவற்றை எழுப்பவிடாமல் எதிர்க்கட்சிகளை தடுக்கவும், பட்ஜெட் மற்றும் அதானி விவகாரத்தையும், பிற முக்கிய பிரச்சினைகளையும் விவாதிக்கவும் விடாமல், மத்திய அரசு மேற்கொண்ட உத்திகளே பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததைப் பார்த்தோம்.

    எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால், நரேந்திர மோடி அரசு இதுவரை இல்லாத வகையில், அவைக்குறிப்பில் இருந்து பேச்சுகளை நீக்கியது, விவாதங்களைத் தடுத்தது, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியது, இறுதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவியை மின்னல் வேகத்தில் பறித்தது. இவற்றின் விளைவாக ரூ.45 லட்சம் கோடி அளவிலான மக்கள் பணத்துடனான மத்திய பட்ஜெட்டை விவாதமே இன்றி நிறைவேற்றினர்.

    சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை நரேந்திர மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் வழக்குகளுக்கு ஆளாகிறவர்கள், பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் அந்த வழக்குகள் அதிசயமாக காணாமல் போகின்றன.

    நீதித்துறையை பலவீனப்படுத்த முறையாக முயற்சிகள் செய்வது முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளது. முன்னாள் நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று சட்ட மந்திரி சொல்கிறார். அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியது வரும் என்று மிரட்டுகிறார்.

    வாய்களை வலுக்கட்டாயமாக அடைப்பதால் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது. கோடானு கோடி மக்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய சட்டப்படியான கேள்விகளுக்குக்கூட பிரதமர் பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார். நிதி மந்திரி தனது பட்ஜெட் பேச்சில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, பணவீக்கம் குறித்தோ குறிப்பிடவில்லை. அவரது மவுனம், கோடானு கோடி மக்கள் தங்கள் அன்றாட அத்தியாவசியப்பொருட்களான பால், காய்கறிகள், முட்டை, சமையல் கியாஸ், சமையல் எண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாமல் அல்லாடி வருவதற்கு உதவாது.

    2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்ட பிரதமர், வசதியாக மவுனமாகி விட்டார். வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை.

    சீனாவுடனான எல்லைப்பிரச்சினை தொடர்கிறது. ஆனால் சீனாவின் ஊடுருவலை பிரதமர் மறுக்கிறார். இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் அரசு தடுக்கிறது. பிரதமரின் தீவிர முயற்சிகளுக்கு அப்பாலும், இந்திய மக்கள் அமைதியாகிவிட மாட்டார்கள். அவர்கள் வாயை அடைத்து விட முடியாது, அடுத்த சில மாதங்கள் நமது ஜனநாயகத்துக்கு கடுமையான சோதனையான காலம் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி மக்களிடம் நேரடியாக செல்வதற்கான முயற்சிகளை எடுக்கும். அரசியல் சாசனத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாப்பதற்கு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் செய்தது போல ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கரம் கோர்க்கும்.

    எங்களுடைய போராட்டம், நாட்டு மக்களின் குரலைப் பாதுகாப்பதற்கானது. எதிர்க்கட்சியாக தனது கடமையை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. அதை நிறைவேற்றுவதற்காக ஒருமித்த எண்ணம் கொண்ட எல்லா கட்சிகளுடன் இணைந்து பாடுபடத் தயார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எம்.பி. பதவி பறிபோனதால் ராகுல் காந்திக்கு டெல்லியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யும் படி அறிவிக்கப்பட்டது.
    • டெல்லி அரசு வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி தாயார் சோனியா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

    கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக குஜராத் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    எம்.பி. ஒருவர் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றால் அவரது எம்.பி. பதவியை இழக்கும் நிலை ஏற்படும். அந்த சட்டப்படி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.

    எம்.பி. பதவி பறிபோனதால் ராகுல் காந்திக்கு டெல்லியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யும் படி அறிவிக்கப்பட்டது.

    அரசு அறிவிப்பின்படி வீட்டை காலி செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய ராகுல் காந்தியின் மனுவை நேற்று சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு நீடித்தது. இதையடுத்து அவர் டெல்லி அரசு வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி நாளை இந்தவீட்டை காலி செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

    டெல்லி அரசு வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி டெல்லியில் தாயார் சோனியா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

    இதற்காக அரசு வீட்டில் இருந்த பொருட்களை மாற்றும் பணி தொடங்கி உள்ளது. நாளை அவர் சோனியா வீட்டிற்கு குடிபோகிறார்.

    • ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
    • இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனதாதளம்(எஸ்) சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அந்த கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி போன்றோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் . ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து சோனியாகாந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியாகாந்தி பிரசாரம் செய்யும் அதேநாளில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி 36.6 கி.மீ. ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×