என் மலர்
நீங்கள் தேடியது "Sri Jayandra School"
- பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.
- ஸ்ரீஜெயந்திரா பள்ளி மாணவி மனோன்மணி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
சுரண்டை:
தேசிய அளவில் நடைபெற்ற பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 232 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சுரண்டை ஸ்ரீஜெயந்திரா பள்ளியில் பயிலும் மனோன்மணி என்ற மாணவி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா என்ற மாணவி மாநில அளவில் 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளை டிரஸ்டி, தாளாளர்,முதல்வர் ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.