என் மலர்
நீங்கள் தேடியது "Star Tortoises"
- 2000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
- வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையின் போது காதர் மொய்தீன் என்பவர் சிக்கினார். இவர் மலேசியாவில் இருந்து 2000 நட்சத்திர ஆமைகளை கொண்டு வந்த போது பிடிபட்டார். அவற்றை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் புழல் லட்சுமி புரம் பொருமாள் கோவில் 2-வது தெருவில் ரவிக்குமார் என்பவர் கடல்வாழ் உயிரினம் மற்றும் மலைப்பாம்பு ஆகியவற்றை வைத்திருப்பதாக தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் வனத்துறையினர் நேற்று அந்த வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு மலைப்பாம்பும், 150 நட்சத்திர ஆமைகளும் அங்கு இருந்தன.
மேலும் சில சாதாரண ஆமைகளும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தேடி வருகிறார்கள்.
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
- அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் பெட்டிகளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
அட்டை பெட்டிகளை சோதனை செய்த போது அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. மேலும் அதில் மலேசிய முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.
கடல் வழியாக நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த மர்ம கும்பல் அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை தலைநகரான கொழும்புவில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது மத்திய வான் நுண்ணறிவு பிரிவுஅதிகாரிகள் விமானத்தை பரிசோதனை செய்த போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பெட்டி கிடந்தது.
பெட்டியை உரிமைகோரி யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 22 கிலோ நட்சத்திர ஆமைகள் இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
பின்பு விசாரணை நடத்தியதில் அந்தப் பெட்டியை யார் வைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது வனத்துறையினர் அந்த ஆமைகளை பரிசோதனை செய்தபோது அந்த ஆமைகளின் மீது வைரஸ் கிருமி இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வைத்து மீண்டும் இலங்கை நாட்டிற்கு இன்று காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமைகள் மருந்துக்காக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #TrichyAirport