என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Starlink satellites"

    • ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைள தள வசதிகள் வழங்கி வருகிறது.
    • 20 செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த இயலாமல் போனது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஸ்பேஸ்எக்ஸ் பால்கான்-9 ராக்கெட் மூலம் 20 ஸ்டாலிங்க் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

    ராக்கெட்டின் 2-ம் நிலை என்ஜினில் கோளாறு ஏற்பட 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. அதைவிட குறைவான தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளிமண்டல ஈர்ப்பு விசையின் மூலம் இழுக்கப்படுவதை தவிர்க்க விரைவாக தீர்மானிக்கப்பட்ட தொலைவுக்கு உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாக தொடர்பு கொண்டுள்ளது. அதில் உள்ள அயன் திரஸ்டர்களை பயன்படுத்தி சுற்றுவட்டப்பாதையை விரைவாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் இதை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை ஸ்பேஸ் நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் போயிங் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். தொழில்நுட்ப காரணமாக இன்னும் இவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

    • இந்தியாவில் செயல்பட GMPCS உரிமம் (செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமம்) தேவை.
    • ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும்.

    இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.

    இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது.

    அதன்படி பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

    இன்னும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.

    ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.   

     

    • ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
    • தினமும் 4 முதல் 5 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து வருகின்றன.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.

    இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தினமும் நான்கு முதல் ஐந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எறிந்துவிடுவதாக வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் பதிவிட்டுள்ளார். 

    ×