என் மலர்
நீங்கள் தேடியது "state election"
- திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைய உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவித்துள்ளது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் எனவும், பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய ஜனவரி 30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதி நடைபெறும், வேட்பு மனுக்களை வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள். அதன்பின்னர் பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். பிப்ரவரி 8ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
- ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும்.
- தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும்.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதியும், 5-ந்தேதியும் டெல்லியில் நடக்கிறது.
மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும். மாநாட்டில் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும். ஏனெனில் அவர்கள் மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதிகளில் முக்கியமான செயல்பாட்டாளர்களாக உள்ளனர்.
இந்த 2 நாள் மாநாடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுபவரீதியாக மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மாநாட்டின் முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தொடர்பு, சமூக ஊடக அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயல்பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் மேலாண்மையின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் 2-வது நாளில், முந்தைய நாளின் கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல் திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.