என் மலர்
நீங்கள் தேடியது "Steven Smith"
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார்.
- ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.
இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
- கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.
பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார்.
- 2023 சீசனில் ஸ்டீவன் சுமித் விளையாடவில்லை.
- 2024 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவர் ஏலம் எடுக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முடியவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
இதன்காரணமாக 2024 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த முறையும் இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அதிகாரப்பூர்வ ஆங்கில வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக மைக் பிடித்து வர்ணனை செய்ய இருக்கிறார். இந்திய வீரர் முரளி கார்த்திக் இதற்கு முன்னதாக வியைளாடிக் கொண்டிருக்கும்போது வர்ணனை செய்துள்ளார். அதேபோல் சுமித் தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.
- 58 பந்தில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
- கடைசி ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்- பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிளிப், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிளிப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்ததுடன் ஸ்மித்தும் சதத்தை நெருங்கினார்.
19-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 58 பந்தில் சதம் அடித்தார். பிக் பாஷ் லீக்கில் இது அவரிடன் 3-வது சதம் இதுவாகும். அத்துடன் கடைசி ஓவரில் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. ஸ்மித் 64 பந்தில் 10 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
காலே:
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம்.
- ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட மூன்று வீரர்கள் பங்கேற்பது கிட்டத்தட்ட சந்தேகத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகும் நிலையில், ஸ்டீவன் ஸமித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருடன் அணியை வழிநடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம். முதல் டெஸ்ட் (இலங்கை அணிக்கு எதிராக) போட்டியில் ஸ்டீவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்."
"சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் தனது கரியரில் சிறந்து விளங்கியுள்ளார். அந்த வகையில், இவர்கள் இருவரில் ஒருவர். தற்போதைய சூழ்நிலையில், பேட் கம்மின்ஸ் இடம்பெறுவது கடினம் தான். ஹேசில்வுட் தற்போது நலமுடன் இருக்கிறார். எனினும், அவரின் மருத்துவ அறிக்கையை பொருத்து தான் அவர் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகுவது பற்றிய தகவல்கள் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்று புதிய வீரர்களுடன் விளையாடும் என்று தெரிகிறது. தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்கள் விவரங்களை பிப்ரவரி 12-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது.
- இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ஆகியோர் சதமடித்தனர்.
- இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.
கல்லே:
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய லபுசேன், ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடியது. லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேன், ஸ்மித் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுக்டன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.