என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone pelt"

    • காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ஐதராபாத்:

    புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்லு அர்ஜூன் வீட்டின்மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மரணத்தின் எதிரொலியாக, 20க்கு மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #PMK #KaduvettiGuru
    விழுப்புரம்:

    சென்னையில் நீரிழிவு நோயால் சிகிச்சை பெற்று வந்த பாமக தலைவர் காடு வெட்டி குரு, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதன் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூரில் இயங்கி வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமாகின.

    இதனால் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, அந்தந்த மாவட்டங்களில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews 
    ×