என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student complain"

    • மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
    • பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    மதுரை:

    மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.

    சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கில பெண் பேராசிரியர் தனது படிப்பை முடிக்கவிடாமல் தடுக்கிறார் என பி.எச்.டி. மாணவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் பி.எச்.டி. மாணவர் ஒருவர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதில், கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் என்.பிந்து என்பவர் தனது பி.எச்.டி படிப்பை முடிக்க விடாமல் தடுக்கிறார். மேலும் பி.எச்.டி. படிப்பில் இருந்து விலகி கொள்வதாக கடிதம் எழுதி கையெழுத்திட்டு வழங்குமாறு வற்புறுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். கல்லூரி பேராசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைவினரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.

    புகார் கூறப்பட்ட பேராசிரியர் என்.பிந்து கூறும்போது, ‘‘இந்த மாணவர் தினசரி கல்லூரிக்கு வருவதில்லை. 2014-ம் ஆண்டு பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தார். ஆனால் இதுவரை ஆராய்ச்சிக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவில்லை.

    அப்படி இருக்கும் போது 6 மாதத்துக்கான அறிக்கையை அவரால் எப்படி தாக்கல் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு புகார்களை அவர் மீது கூறினார். #tamilnews
    ×