என் மலர்
நீங்கள் தேடியது "students vomiting"
- பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
- தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் பள்ளி முடிவடைந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று உள்ளனர். அடுத்த நாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், அந்த 8 மாண வர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து சந்தேகமடைந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 8 மாணவர்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.
அப்போதுதான் மாணவர்கள் அன்று மாலை குளிர்பானம் குடித்ததாக வும், அதன்பிறகு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.
இதில் 8 மணாவர்க ளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த பின்பு 5 மாணவர்கள் உடல் நலன் பெற்று வீடு திரும்பிய நிலையில், இரு மாணவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறப்பு மருத்துவக்குழு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் குளிர்பானத்தை அருந்தி விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் குடித்த குளிர்பானத்தால்தான் உடல் உபாதைக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாண வர்களை ஆசியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் இணைந்து கண்காணித்து வருகிறோம். பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் காலாவதியான குளிர்பானம் குறித்து கேட்டதற்கு, காலாவதியான குளிர்பானம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பட்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 37 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் நேற்று பிற்பகல் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது உணவில் பல்லி இறந்து கிடப்பதை 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் பார்த்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் குமாரிடம் தெரிவித்தார். அவர் மாணவர்கள் யாரும் சத்துணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினார். அதற்குள் 36 மாணவர்களுக்கும் மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையறிந்த பெற்றோர், அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் கூறும்போது, சத்துணவு ஊழியர்களின் கவனக் குறைவு காரணமாக பல்லி விழுந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சுந்தர், பள்ளி துணை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
இந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தற்போது நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சத்துணவு செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. நேற்று அவர்கள் தான் உணவு சமைத்துள்ளனர். இது குறித்து சத்துணவு ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.