என் மலர்
நீங்கள் தேடியது "sub-health centers"
- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
- சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
புதியம்புத்தூர்:
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை அன்புராஜ், மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, ஹரி பாலகிருஷ்ணன், ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, ஒட்டநத்தம் கிளை செயலாளர், கொண்டல் சுப்பையா, மகளிரணி காமினி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.