என் மலர்
நீங்கள் தேடியது "Subman Gill"
- முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
- ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பனிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக ஹர்த்திக் இருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தெரிவித்தன.
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.
- அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடவில்லை.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.
அங்கு அவர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் இந்திய அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் வெளியேறுவார். அவர் 2 போட்டியில் விளையாடி 47 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது ஐசிசி.
- செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சிராஜ் மற்றும் மலானைப் பின்னுக்குத் தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.
இதேபோல, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.
- முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.
- 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலியும் 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஷர்துல் தாகூரும் தட்டிச் சென்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து அந்த போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் போது அனைத்து வீரர்களும் கலாய்த்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ரியாக்ஷன் வேர லெவலில் இருந்தது.
கேஎல் ராகுல் பீல்டராக சிறப்பாக செயல்பட்டாலும் கீப்பிங் என்று வரும் போது அவர் சுமாராகவே செயல்படுவார். அதனால் கூட அனைவரும் கலாய்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆட்டத்திற்கு இடையில் ஹர்டிக் பாண்டியா, சும்பன் கில்லிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடித்தார்
- பாண்ட்யாவின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 5) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.
இதனைத்தொடர்ந்து பேட்டிங் இறங்கிய இந்தியா சுலபமாக 97 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

இந்நிலையில் ஆட்டத்திற்கு இடையில் ஹர்டிக் பாண்டியா மற்றோரு நட்சத்திர வீரர் சும்பன் கில்லிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடித்தபின் பாட்டிலை கீழே போட்டுவிட்டு சுபமன் கில்லை அதை எடுத்துக்கொள்ளும்படி சைகை காட்டும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்ட்யாவின் இந்த செயலுக்கு நெட்டிசங்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
- சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
- ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.
ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
- முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி 11 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தியிருந்தார்.
முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் வாங்கியது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.
அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.
இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.
கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.
வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.
அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:
1. ரஷித் கான், 2. சுப்மன் கில், 3. சாய் சுதர்சன், 4. ராகுல் தெவாடியா, 5. ஷாருக் கான், 6. ககிசோ ரபாடா, 7. ஜோஸ் பட்லர், 8. முகமது சிராஜ், 9. பிரசித் கிருஷ்ணா, 10. நிஷாந்த் சிந்து, 11. மஹிபால் லோம்ரோர், 12. குமார் குஷாக்ரா, 13. அனுஜ் ராவத், 14. மானவ் சுதார், 15. வாஷிங்டன் சுந்தர், 16. ஜெரால்ட் கோட்சீ , 17. குர்னூர் ப்ரார், `18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 19. சாய் கிஷோர், 20. இஷாந்த் சர்மா, 21. ஜெயந்த் யாதவ், 22. க்ளென் பிலிப்ஸ், 23. கரீம் ஜனத், 24. குல்வந்த் கெஜ்ரோலியா. 25. அர்ஷத் கான்
- கேப்டன் ரோகித் சர்மா, அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதா தகவல்.
- தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என கம்பீர் விரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்ததாகவும் இறுதியில் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை.
- சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஸ்குவாட் தேர்வு குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
சுப்மன் கில்லை திடீரென துணை கேப்டன் என்று சொல்கிறார்கள். 6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஸ்கோர். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டிய காரணம் என்ன?
நல்லவேளை ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார். என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.. ஒன்னுமே புரில எனக்கு.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவே தர மாட்டிக்கிறீங்களே
சுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்கள். சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன் இருக்கிறார். அதே போல இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சஞ்சு சாம்சனை நான் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்ய ஆதரவு கொடுப்பேன்.
கில் என்ன செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஆனால் சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை?
ஆஸ்திரேலிய மண்ணில் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடியதால் ஹீரோ போல காண்பித்தீர்கள். தற்போது இத்தொடரில் தகுதி இருந்தும் தேர்வு செய்யாத நீங்கள் அவரை திடீரென கீழே போட்டுள்ளீர்கள்.
சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அழிப்பது நியாயமே இல்லை என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
அதே சமயம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி குறித்து அஷ்வின் தனது யூடியூப் சானலில் நேரலையில் பிரபல கிரிக்கெட் வல்லுநர் Pdogg என்று அழைக்கப்படும் பிரசன்ன அகோரம் உடன் உரையாற்றினார்.
அப்போது நேரலையில் ரசிகர் ஒருவர் "Pdogg தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று அஷ்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த அஷ்வின், "டேய் உன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை எடுக்கவில்லையா? என கேட்க Pdogg இல்லை என்று சைகை காட்டுகிறார். உடனே அஷ்வின் இல்ல எனக்கு புரியல என்று கேட்க, அதற்கு Pdogg ஹானஸ்ட் ராஜ் என்று எப்படி என்னை எல்லாரும் கூப்பிடுவார்கள் நியாயமா இருந்தா தானே கூப்பிடுவாங்க என்று சொல்ல, அதற்கு அஷ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் கில் 58 ஆவரேஜ் வைத்துள்ளான். சும்மா பாப்புலர் கருத்துன்னு உன்னோட அணியில் இருந்து அவனை எடுத்துவிட்டியா?" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.