என் மலர்
நீங்கள் தேடியது "substitute"
- மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
- இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
இதனிடையே ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து வேகமாக மோதியது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில், துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்றுவீராக களமிறங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரருக்கு மாற்றுவீராக களமிறங்குவர் அவரை போன்ற வீரராக இருக்கவேண்டும். அதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக இன்னொரு பேட்ஸ்மேனும் ஒரு பவுலருக்கு பதிலாக இன்னொரு பவுலரும் ஒரு ஆல் ரவுண்டருக்கு பதிலாக இன்னொரு ஆல் ரவுண்டரும் தான் களமிறங்க வேண்டும்.
ஆனால் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது நியாயம் கிடையாது என்று விமர்சனம் எழுந்தது. குறிப்பாக சிவம் துபேவுக்கு பதிலாக ரமன்தீப் சிங் தான் உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் தான் சரியான மாற்றுவீரர் என்று போட்டியை வர்ணனை செய்து வந்த ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.
இதனிடையே போட்டி முடிவடைந்த பின்பு இந்த விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், "காயம் ஏற்பட்ட ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது. துபேவும் வேகமாக பந்து வீசியதில்லை, ராணாவும் பேட்டிங்கில் பெரியதாக முன்னேறிவிடவில்லை. நாங்கள் பேட்டிங் களமிறங்கும்போது இந்திய அணியில் ஹர்ஷித் உள்ளதை பார்த்து கேட்டதற்கு, துபேவுக்கு மாற்றாக வந்துள்ளார் எனச் சொன்னார்கள். அப்போதே அதை ஏற்க மறுத்தேன். போட்டியின் நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவையெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்" விரக்தியுடன் தெரிவித்தார்.