என் மலர்
நீங்கள் தேடியது "Sudarsan Pattnaik"
- கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.
இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.
தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.
- விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.
- துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
- அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புவனேஸ்வர்:
துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா:
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.
அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அவர்களது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.
இதேபோல் மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வரிசையாக நின்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை, மதுரை, சென்னை, கோவை, நெல்லை உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். மணல் சிற்பத்தை செய்துமுடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும், 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
- அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டன.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மாஸ்கோவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்றது.
- இதில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கம் வென்றார்.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 4-ம் தேதி முதல் இன்று (12-ம் தேதி) வரை மணலில் சிற்பங்கள் உருவாக்குவது தொடர்பான சர்வதேச போட்டி நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 21 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் சுதர்சன் பட்நாயக்.
இந்நிலையில், இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில், 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒடியா கவிஞரான அவரது பக்தரான பலராம் தாஸ் உடன் தேர் மற்றும் ஜெகநாதரை சித்தரிக்கும் 12 அடி சிற்பத்தை வடிவமைத்து இருந்தார். இவரது இந்த சிற்பம் தேர்வு செய்யப்பட்டு சுதர்சன் பட்நாயக்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. விருது வென்றது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:
இங்கு நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கத்துடன் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மணல் கலை நாட்டிற்கு பெருமை சேர்த்தது பெருமைக்குரியது.
மகாபிரபு ஜெகநாத் மற்றும் மணல் கலையின் நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரின் மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பூரியில் உலகப்புகழ் பெற்ற ரதயாத்திரை நடந்து வருகிறது. எனவே, மகாபிரபுவின் ஆசீர்வாதத்துடன் இந்த விழாவில் மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கி உள்ளேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
- டொனால்டு டிரம்ப் இன்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, டிரம்ப் இன்று அதிபராக பதவியேற்கிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு என எழுதியுள்ளார்.