என் மலர்
நீங்கள் தேடியது "Suryakumar Yadav"
- நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.
- ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.
அடிலெய்டு:
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.
விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். ஒரு சில சமயங்களில் அவர் சரியாக ஆடாத போது, அவரது கதை முடிந்து விட்டது என்று விமர்சனங்கள் வருவது ஏன்? என்பது தெரியவில்லை. அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.
எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்.
நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எதிரணியை பற்றி அதிகமாக சிந்திக்காமல் எங்களுடைய அணி குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.
ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளிக்கையில், 'அப்படி நடந்தால் அது இந்தியா, பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்து இருக்கிறோம். அதனை செய்ய முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.
- சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
- குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.
இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-
தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.
பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
- ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.
மவுண்ட் மாங்கானு:
நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.
மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது.
- அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மவுண்ட் மவுங்கனி:
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ், மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டர்களும், ஏழு சிக்சர்களும் அடங்கும். நடப்பாண்டில் சூர்யகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இது எங்களுடைய சிறந்த ஆட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது. என் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.
அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் இன்று சரிவர செயல்படவில்லை. எங்களுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு உத்வேகம் கிடைக்கவில்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்தோம். இதேபோன்று முக்கிய நேரத்தில் பேட்டிங்கில் நான் சோபிக்கவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி வெறுப்பை தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தான் இதற்கு காரணம்.
அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.எங்களுடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். சிறு தவறுகளால் தான் சில சமயம் போட்டியின் முடிவே மாறுகிறது.
சில சமயம் சூர்யகுமார் யாதவ் போன்று சிலர் சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்கள். அது நமக்கு தோல்வியை தரலாம்.தற்போது உலகத்தில் சூர்ய குமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார் என்று வில்லியம்சன் கூறினார்.
- சூர்யகுமார் யாதவ் சதம் வீளாசியதன் மூலம் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார்.
- சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126-க்கு ஆல் அவுட்டானது.
இதனால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். ஒற்றையாளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 7-வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி 6 முறை பெற்றிருந்தார். சூர்யகுமார் யாதவை போலவே ஜிம்பாப்வே அணியின் சிகாந்தர் ராசாவும் 7 முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.
இதே போல ரோகித் சர்மாவின் சாதனையையும் சூர்யகுமார் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசிய ஓரே இந்தியராக ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். ஆனால் நேற்றைய சதத்தின் மூலம் ரோகித்தை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் குறைந்த காலத்திலேயே உலகின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 39 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,395 ரன்களை விளாசியிருக்கிறார்.
- அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்.
- எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
அதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்னில் சுருண்டது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தான் அடுத்த ஏபி டீ வில்லியர்ஸா? என்று நேற்றைய போட்டி முடிவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எப்போதுமே நான் முதல் சூர்யகுமார் யாதவாக இருக்க விரும்புகிறேன் என்று அடக்கமாக பதிலளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை. ஆனால் அவரிடம் நான் நிறைய பேசியுள்ளேன். மேலும் தற்போது செய்வதை தொடர விரும்பும் நான் அடுத்த சூர்யகுமார் யாதவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
என்னைப் பற்றி வாழ்த்து செய்திகளும் ட்வீட்களும் வரும் போது நான் நல்லபடியாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய போது நிறைய கற்றுக் கொண்டேன். தற்போது விராட் கோலியுடன் இணைந்து கற்றுக்கொண்டு விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து புறங்களிலும் அடிப்பதில் ரகசியம் ஒன்றுமில்லை. பயிற்சியில் என்ன நான் செய்கிறேனோ அதை மாற்றாமல் களத்தில் அதிரடியாக அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்கிறேன்.
அதுதான் முக்கியம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பொறுமையை பற்றி நினைக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும். அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பயிற்சி மற்றும் ஹோட்டல் அறையில் நினைக்க வேண்டுமே தவிர களத்தில் நினைக்க கூடாது. மேலும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
- டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.
மும்பை:
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.
- டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
- 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.
ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி)
சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள் முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள் டெவோன் கான்வே - 788 புள்ளிகள் பாபர் ஆசம் - 778 புள்ளிகள் ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள் டேவிட் மாலன் - 719 புள்ளிகள் கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள் ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள் ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள் பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்
- முட்டிப்போட்டு அடிக்கும் ஸ்வீப் வகை ஷாட் தனக்கு பிடித்தமான என சூர்யகுமார் கூறினார்.
- இஷான் கிஷன், பண்ட் ஆகியோர் சூர்யகுமார் யாதவுக்கு அதிகமான மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்களாகும்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி அவதாரமாக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள ருசிகர பேட்டி வருமாறு:-
கேள்வி: 20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறந்த இன்னிங்ஸ் எது?
பதில்: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்சில் 31 பந்தில் 57 ரன்கள் எடுத்தேன். அணியும் வெற்றி பெற்றது. அது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு இன்னிங்ஸ்.
கேள்வி: மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது யாருடைய ஷாட்?
பதில்: ரோகித் சர்மா அடிக்கும் புல் ஷாட்.
கேள்வி: உங்களுக்கு பிடித்தமான ஷாட் எது?
பதில்: முட்டிப்போட்டு அடிக்கும் 'ஸ்வீப்' வகை ஷாட்.
கேள்வி: கடந்த கால பந்து வீச்சாளர்களில் ஒருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதாக இருந்தால் அது யாருடையதாக இருக்கும்?
பதில்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
கேள்வி: உங்களுக்கு அதிகமான மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்கள் யார்?
பதில்: இஷான் கிஷன், ரிஷப் பண்ட்.
கேள்வி: உங்களுக்கும், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றால் யார் வெற்றி பெறுவார்கள்?
பதில்: விராட் கோலி.
கேள்வி: நீங்கள் இதுவரை விளையாடியதில் சிக்சர் விளாசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் எது?
பதில்: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்.
இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.
- டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டி இரண்டரை மடங்கு பெரியது ஆகும்.
- என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.
மும்பை:
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் 1 - 0 என வெற்றி பெற்ற சூழலில், ஒருநாள் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்தது.
இந்த ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் 4, அதன்பின்னர் 34*, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் ௨-வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படியா சொதப்புவார் எனும் அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யகுமாரின் பிரச்சினை குறித்து ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:-
சூர்யகுமார் யாதவ் முதலில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். அந்த அளவிற்கு அவர் பொறுமை காக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ரன்களை வழக்கத்தை விட 30 - 40 பந்துகளுக்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துவிடுகிறார். இதனை சரிசெய்ய சற்று அவருக்கு நேரத்தை கொடுக்க வேண்டும்.
இதே போல என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த ஃபார்மெட். யாரின் மரியாதைக்காகவும் காத்துக்கொண்டிருக்காது. எனவே களத்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டும். சூர்யகுமாரும் புரிந்துக்கொண்டு வருவார் என நம்புகிறேன்.
வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் விளையாடவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் 50 ஓவர் வடிவத்திற்கு ஏற்றார் போல மாறி வர வேண்டும். அவர் 5ம் இடத்தில் களமிறங்கும் போது ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்போது வேண்டுமானால் அதிரடி காட்டிக்கொள்ளலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
- மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.
- நான் விதைத்த விதைகள், மரமாக வளர்ந்து அதன் பழங்களை அனுபவித்து வருகிறேன்.
- போட்டிக்கு வரும் போது எனது ஆட்டத்தை ரசித்து என்னை வெளிப்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன்.
மும்பை:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இப்போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடவில்லை.
20 ஓவர் போட்டி தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை கேப்டன் பதவிக்கு நியமனம் செய்யப்படுவது தொடர்பாக சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-
துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டு என்னை நானே கேட்டு கொண்டேன் இது கனவா என்று. இதை இன்னும் கனவு போல் உணர்கிறேன். அணி அறிவிக்கப்பட்டதும் என் தந்தை எனக்கு அந்த செய்தியை அனுப்பினார்.
பின்னர் இருவரும் பேசி கொண்டோம். மேலும் அவர் எனக்கு அனுப்பிய செய்தியில், எந்த அழுத்தத்தையும் எடுத்து கொள்ள வேண்டாம். உனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடு என்று கூறி இருந்தார்.
எனது பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்து உள்ளது. நான் விதைத்த விதைகள், மரமாக வளர்ந்து அதன் பழங்களை அனுபவித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இந்தியாவுக்காக விளையாடிய காலத்திலிருந்தே என் மீது எப்போதும் பொறுப்பும், அழுத்தமும் இருந்தது. அதே வேளையில் எனது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன்.
நான் எந்த சுமையையும் எடுத்து செல்வதில்லை. போட்டிக்கு வரும் போது எனது ஆட்டத்தை ரசித்து என்னை வெளிப்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன். ஹர்த்திக் பாண்ட்யாவுடன் பந்தம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது.
இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நிறைய சேர்ந்து விளையாடி உள்ளோம். அவரது கேப்டன் ஷிப்பின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.