என் மலர்
நீங்கள் தேடியது "tag 100684"
தேனி:
தேனி அருகே தேவாரம் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி(வயது44). இவர் திடீர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையில் இருந்த போது லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன்(வயது32) என்பவர் மாரிச்சாமியிடம் மாதந்தோறும் ரூ.15ஆயிரம் மாமுல்தரவேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பணம் தராவிட்டால் பிரச்சினை ஏற்படும் என அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தேனி:
தேனி பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருஷ்ணபிரியா (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா தேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வெளியே கடைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் ஊர் திரும்பவில்லை. இதனால் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் கிருஷ்ணபிரியா அங்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண பிரியாவை தேடி வருகின்றனர்.
கூடலூர்:
தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கோடை மழை பெய்யாததால் வறட்சி மேலோங்கி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே? நேற்றும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது.
இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தேனி, கூடலூர், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.20 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 36.78 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 2.6, தேக்கடி 15.8, கூடலூர் 14.4, உத்தமபாளையம் 22.6, சண்முகாநதி அணை 6, வீரபாண்டி 22, வைகை அணை 23, மஞ்சளாறு 32 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டனர். கலெக்டர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை. ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். அவர் விளக்கம் தருவதாக கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடக்கும். வட மாநிலங்களைப் போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் நடைபெறாது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பல வினோதங்கள், பல வேடிக்கைகள் நடைபெறுகிறது.
கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட் டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை. 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது.
மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்த கட்டிடத்திற்குள் பெண் தாசில்தார் சென்று வந்துள்ளார். இந்த விஷயம் கோர்ட்டு வரை சென்று அதன் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்போது தேனியிலும், ஈரோட்டிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஏதோ சதி செய்வதற்காக திட்டமிடுவதாகவே கருதுகிறோம். எந்த சதி திட்டமானாலும் அதை திமு.க. முறியடிக்கும்.
தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை. தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர்.

தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்டு இருந்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருகிறார்கள்.
இதில் மிகப்பெரிய மர்மம் உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
கடந்த வாரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகனை வெற்றி பெற செய்ய வைக்க தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் இப்போது தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #LokSabhaElections2019 #TNElections2019
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு அரசு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 7,039 மாணவர்களும், 7414 மாணவிகளும் என மொத்தம் 14453 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
இதில் 6466 மாணவர்களும், 7116 மாணவிகளும் என மொத்தம் 13582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.06 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 138 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 12 அரசு பள்ளிகளும், 28 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
தற்போது வறட்சி அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்ட காவலுக்கு சென்று வருகின்றனர். உத்தமபாளையம் அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 43). இவர் சூரியன், கார்த்திக், ரவி ஆகியோருடன் தனியார் தென்னந்தோப்பில் காவல் பணிக்கு சென்றுள்ளார்.
தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த போது காட்டுப்பன்றி ஆவேசமாக சீறிப் பாய்ந்து வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த 4 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இருந்த போதும் காட்டுப்பன்றி அவர்களை விரட்டியது. இதில் குமரன் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாததால் குமரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.