என் மலர்
நீங்கள் தேடியது "tag 105468"
சங்ககிரியை சேர்ந்தவர் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் சாவு.
பரமத்திவேலூர்:
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர் குடும்பத்துடன் சுற்றுலா தனது மனைவி சுமையா மற்றும் இவரது மகன்கள் உமர்சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 15 பேர் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் ஆழமான பகுதியில் குளித்தார்.
அப்போது திடீரென அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாஸை ராஜா வாய்க்காலில் தேடினர்.
தண்ணீர் அதிகமாக சென்றதால் தண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் சட்டர்களை அடைத்தனர்.
இதில் ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஷாநவாஸ் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம்.
தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கைர - 100 கிராம்
பாதாம் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
மாம்பழம் - 1

செய்முறை :
மாம்பழத்தை தோல் சீவி நீள நீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.
அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம்.
சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.
மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.
பால் அரிசி மா கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இதை குச்சி ஐஸ் அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குச்சி ஐஸ் அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.
மாம்பழ குச்சி ஐஸ் உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.
பால் - அரை லிட்டர்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கைர - 100 கிராம்
பாதாம் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
மாம்பழம் - 1

மாம்பழத்தை தோல் சீவி நீள நீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.
அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம்.
சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.
மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.
பால் அரிசி மா கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இதை குச்சி ஐஸ் அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குச்சி ஐஸ் அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.
மாம்பழ குச்சி ஐஸ் உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.
இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.