என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 115930"

    பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தி.மு.க.வுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் மூர்த்தி பெருமிதம் கொள்கிறார்.
    புதூர்

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடம், புதிய ரேஷன் கடை திறப்பு விழா  நடந்தது.அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.  ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் மற்றும் ஆலத்தூர் ராஜவேல் வரவேற்றனர்.   கலெக்டர் அனீஷ்சேகர், முன்னிலை வகித்தார். 

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதிநிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது.தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மக்களிடையே   செல்வாக்கு அதிகரித்துள்ளது. 
    திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவி விட்டது.   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்காக குடிநீர், மின்சார, சாலை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    உயர் மின்னழுத்த வசதி   பெரும்பாலான  கிராமப்புறங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மதுரையில் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் மின்மாற்றி அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  
    இவ்வாறு அவர் பேசினார்.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முகமை இணை இயக்குனர் அபிதா ஹனிப், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி,  செயற்பொறியாளர் இந்துமதி, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வீரராகவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நேரு பாண்டியன், ஒன்றிய குழு துணை தலைவர் கார்த்திக் ராஜா, ஆலத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர்  நிறை குளம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி, சாந்தி   உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தொடர்ந்து தி.மு.க.வில் இணைப்பு விழா நடந்தது. இதில்  அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல்,  ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட 400 பேர் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். 

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிறை செல்வம், மாணவரணி அமைப்பாளர் ஆனையூர் மருதுபாண்டி, இளைஞரணி அமைப்பாளர் கூடல் நகர் ராஜா,  ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்தக்கடை முருகேஸ்வரி சரவணன், நரசிங்கம் ஆனந்து, பெரியபட்டி குட்டி முத்துக்குமரன், உசிலம்பட்டி நியாதிபதி,கருவனூர் தாமரைச்செல்வி மணிவண்ணன், ஆண்டார் கொட்டாரம் சீமான், காதக்கிணறு செல்வி சேகர், தி.மு.க. நிர்வாகிகள் திருப்பாலை ராமமூர்த்தி, ஆசை வாயன், கண்ணனேந்தல் கவுரிசங்கர், நாகனாகுளம சசிகுமார்,  கவுன்சிலர் ராதிகா, செங்கிஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார். #PiyushGoyal #BJP #Congress
    புதுடெல்லி:

    வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது. இந்த வாக்குறுதியை கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலிலும் சோனியா காந்தி கூறினார். ஆனால் இந்த வாக்குறுதியை அந்த கட்சி நிறைவேற்றவில்லை. மோடி அரசு பதவி ஏற்கும்போது 18,452 கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது.

    அவர்களின் வாக்குறுதியை கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் 2004 மற்றும் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் ஆகியவற்றையும் மோடி அரசுதான் தற்போது நிறைவேற்றி உள்ளது”.

    இவ்வாறு அவர் கூறினார்.   #PiyushGoyal #BJP #Congress
    வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். #NitinGadkari #BJP
    மும்பை :

    மும்பையில், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில், நிதின் கட்கரி பேசியதாவது:-

    மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் தலைவர்களை பொதுமக்களுக்கு பிடிக்கும். ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதே பொதுமக்களிடம், அரசியல் தலைவர்கள் (அரசியல்ரீதியாக) அடி வாங்குவார்கள்.

    நான் வாக்குறுதி மட்டுமே கொடுக்கும் அரசியல்வாதி அல்ல. அதை 100 சதவீதம் நிறைவேற்றுபவன்.

    நான் மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, நான் திட்டங்களை முடித்த விதத்தை மும்பை பத்திரிகையாளர்கள் பார்த்து இருப்பார்கள். மும்பையில் 50 மேம்பாலங்கள் கட்டப் போவதாக நான் அறிவித்தபோது, எல்லோரும் கேலியாக பார்த்தனர்.



    ஆனால், மேம்பாலங்களை கட்டியதுடன், மும்பை-புனே இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையவும் காரணமாக இருந்தேன்.

    இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

    நிதின் கட்கரி, கடந்த மாதம், புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார். 3 மாநில தேர்தல் தோல்வியைத்தான் அவர் சுட்டிக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது.

    கடந்த 13-ந் தேதி நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசுகையில், அரசியல்வாதிகள் பிற துறைகளில் தலையிடக்கூடாது என்று கூறினார். அதுவும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடிவாங்குவார்கள் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NitinGadkari #BJP

    நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் மோடி தகர்த்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
    ஐதராபாத்:

    டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் பலப்பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவைகளை நிறைவேற்றவில்லை.



    பிரதமர் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகள் அளித்தார். தான் இந்த நாட்டின் ‘காவலாளி’ பிரதம மந்திரி அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.

    பிரதமர் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரா?

    எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #NarendraModi #RahulGandhi
    எங்கள் தளங்கள் வழியாக தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் கமிஷனிடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்துள்ளன என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் தெரிவித்தார். #SocialMedia #ElectionCommission #PollCampaign
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷனின் மூத்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப்பேசினார்கள்.



    அவர்களிடம், “தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என கேட்கப்பட்டது.

    அப்போது அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான எதையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் உறுதி தந்தனர்.

    இது கர்நாடக சட்டசபை தேர்தலின்போது சோதித்துப் பார்க்கப்பட்டது. அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 4 மாநில சட்டசபை தேர்தலில் சோதித்துப் பார்க்கப்படும்.

    சமூக வலைத்தளங்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் தளங்களில் அரசியல்கட்சிகள் வெளியிடுகிற விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அவற்றின் கட்டண விவரத்துடன் தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிட உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SocialMedia #ElectionCommission #PollCampaign
    ×