என் மலர்
நீங்கள் தேடியது "tag 149021"
பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவர் தனியார் கூரியர் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இதே வேனில் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த சிவபெருமாள் மகன் சந்தோஷ்குமார் (21) கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சரவணன் (22) என்பவரை உதவிக்கு உடன் அழைத்து வந்தார்.
நள்ளிரவு சேலத்தில் இருந்து கூரியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. வேனை ராமலிங்கம் ஓட்டினார். அருகில் உள்ள இருக்கையில் கிளீனர் சந்தோஷ்குமார், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர்.
கூரியர் வேன் போகும் வழியில் ஒவ்வொரு இடங்களாக நிறுத்தி, பார்சல்களை கூரியர் அலுவலகங்களில் ஒப்படைத்தப்படி சென்று கொண்டிருந்தது.
கூரியர்வேன் இன்று அதிகாலை 6.25 மணிக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றது.
அப்பேது பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரைக்கு 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த லாரியின் பின்பக்கத்தில் கூரியர் வேன் எதிர்பாராதவிதமாக டமார் என பயங்கரமாக மோதியது. இதில் வேன் டிரைவர் ராமலிங்கம், கிளீனர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலை, முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிப்பட்டு இருக்கையிலேயே பலியாகினர். சரவணன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
வேன் கண்ணாடிகள் உடைந்து சிதறி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரியை நிறுத்தி வைக்கக்கூடாது என நாமக்கல் போக்குவரத்து போலீசார் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதையும் மீறி டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். மேலும் அவர் அந்த லாரியில் தூங்கிக் கொண்டும் இருந்துள்ளார். விபத்து ஏற்பட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், வேன் டிரைவர் ராமலிங்கம் சரியாக தூங்கி ஓய்வு எடுக்காமல் இரவு வேனை ஓட்டி இருக்கலாம். அதனால் தூக்க கலக்கத்தில் இன்று அதிகாலை லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார் என சந்தேகப்படுகிறோம் என்றனர்.
விபத்தில் ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் பலியான தகவல் அறிந்து உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சோகத்துடன் கூடியுள்ளனர். #accident
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னிப்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணிதுறை சார்பில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதி பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றுப்பகுதியில் வந்து ஜே.சி.பி மற்றும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே ஊழியர்கள் மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கும் மற்றும் நாமக்கல் மாவட்ட உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் உத்தரவில்தான் இங்கு மணல் குவாரி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரவு நகலை காண்பித்தார். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கூறுகையில் 10 ஊர்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் செல்கிறது.
இங்கு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிடும். நாங்கள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் விவசாயம் செய்யமுடியாமல் நாங்கள் ஊரை காலி செய்து விட்டுதான் போகவேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும், முற்றுகையிலும், ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பேசிவிட்டு, அதிகாரிகள் பேசுகையில் 3 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நீதிமன்றத்திற்கு சென்று இங்கு மணல் குவாரி அமைக்காமல் இருக்கு உத்தரவு நகலை பெற்று வருமாறு கூறினார். அதுவரை இங்குவேலை நடைபெறாது என்று உறுதியளித்த பின்பு திங்கள் கிழமை அன்று நீங்கள் உத்தரவு நகல் வாங்கிவரவில்லை என்றால் அன்று முதல் மீண்டும் மணல் குவாரி அமைக்க எல்லா வேலைகளும் நடைபெறும்.
அதற்கு நீங்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார். உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.