search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநீக்கம்"

    • ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல்.
    • நிதிநிலையை திட்டமிடவும் முடிவு.

    மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும். இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 10) பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் மெட்டா நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் பேரூராட்சி ஊழியர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
    வடமதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமர் என்பவர் கோரிக்கை மனுவுடன் வந்தார். அவர் தெரிவிக்கையில் கடந்த 8 வருடமாக வடமதுரை பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தேன்.

    ஆனால் தற்போது கடந்த மே மாதம் முதல் வேலை இல்லை என கூறிவிட்டனர். எந்தவித காரணமும் கூறாமல் என்னை வேலையை விட்டு நீக்கியதால் என் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து நான் பலமுறை கேட்டபோதும் அனைவரும் ஒன்றுசேர்ந்தது போல நீ வேலைக்கு வேண்டாம் என கூறிவிட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் வேலைக்கே வராமல் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர். வறுமையில் வாடும் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனக்கு பணி வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள பொதுமக்கள் அளித்த மனுவில்,  பூ மார்க்கெட் எதிர்புறம் ேஷர்ஆட்டோ மற்றும் லோடு வாகனங்கள் நிறுத்தி உள்ளனர். தற்போது அப்பகுதியில் மரக்கடைகளுக்கு வரும் கனரக வாகனங்களும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இதனை சரிசெய்யவேண்டும் என தெரிவித்தனர்.

    குரும்பபட்டி ஊராட்சி ஒன்றியம் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்தமனுவில் எங்கள் ஊருக்கு பாதை வசதி இல்லை. ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது.

    இதனால் 6 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரிலும், கடிதம் மூலம் தெரிவித்தும், கிராம சவை கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
    ×