search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 211600"

    வைத்தீஸ்வரன்கோயிலில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் 4வயது முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. 

    போட்டிக்கு பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞா னசெல்வன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த தியாகராஜன், மதன்,விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் சிவசங்கர் போட்டிகளை தொடங்கிவைத்தார். 

    நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் நான்கு வயது குழந்தைகள் முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

    இயற்கை ஓவியங்கள், உதவும் கரங்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
    ×