என் மலர்
நீங்கள் தேடியது "செஸ்"
- இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.
உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.
பின்னர் உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு புகழ்மாலை சூட்டுகிறேன். நம்ம சென்னை பையன் குகேஷ். செஸ் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது அறிவு சார்ந்த விளையாட்டு. திறமை, விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணத்தால் 11 ஆண்டுகளில் இந்த உலக சாதனையை அவர் படைத்துள்ளார். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
விஸ்வநாதன் ஆனந்த் முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார். இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.
தமிழக விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. பாரீஸ் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு 5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பொறுமையாக சரியான நகர்வுகள் மூலம் ஆற்றல் குறைவான சிப்பாயைக் கூட சக்திவாய்ந்த ராணியாக மாற்றலாம்.. அதே போல் பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான். வெற்றி தோல்வி முக்கியம் அல்ல, பங்கேற்புதான் முக்கியம், பங்கேற்பதே பெரிய வெற்றிதான்
விளையாட்டு துறையை சிறப்பாக நடத்தி வரும் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
- குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
- குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை திரும்பிய குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷூக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் இச்சந்திப்பின்போது குகேஷிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அவர் வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை குகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு கார்ல்சனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேக்னஸ் கார்ல்சன் 2ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தார். போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக FIDE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
- இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
- குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
இதனையடுத்து குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஜாம்பவான்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா விதித் குஜராத்தி மற்றும் சாகர் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் ஜாலியாக அந்த வீடியோவில் நடனமாடுகின்றனர்.
- குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
- முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன.
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கேல் ரத்னா விருதை பெற்றுக் கொண்ட குகேஷ் நேரடியாக ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். போட்டியின் முதல் சுற்று தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பு வந்த குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் 35-வது நகர்த்தலில் அனிஷ் கிரி தவறாக காய் நகர்த்த போட்டியின் நிலை தலைகீழாக மாறியது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் அப்துசட்டோரோ மோதினர். கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியனான சீனாவின் வெய் யி, முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் டிராவில் முடிந்தது.
இதே போல் முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன. லியோன் லூக் மென்டோன்கா மற்றும் வின்சென்ட் கீமர் இடையிலான போட்டியில் லியோன் லூக் வெற்றி பெற்றார்.
- 13 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டி மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என 2 பிரிவிலும் நடைபெறுகிறது.
- இந்திய வீரர்களான அரிகிருஷ்ணா, எரிகேசி ஆகியோர் 'டிரா' செய்தனர்.
ஆம்ஸ்டார்டா:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ் ஆன் ஜீயில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டி மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என 2 பிரிவிலும் நடைபெறுகிறது.
மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, நெதர்லாந்தை சேர்ந்த மேத்ஸ் வார்மர் டாமை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
பிரக்ஞானந்தா முதல் சுற்றில் 'டிரா' செய்தார். அதை தொடர்ந்து அவர் 3 சுற்றுகளில் வெற்றி பெற்றார். தற்போது 'டிரா' செய்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் 5-வது சுற்றில் ஜெர்மனி வீரர்வின் சென்ட் கெய்மரை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான அரிகிருஷ்ணா, எரிகேசி ஆகியோர் 'டிரா' செய்தனர்.
5 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடன் இணைந்து தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
குகேஷ் 3.5 புள்ளியுடனும், அரிகிருஷ்ணா 3 புள்ளியுட னும் 3 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர்.
- விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.
- அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.
இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன் தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்று் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
- இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
- அவர் 4.5 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 7-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினர். குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். 33-வது காய்நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது.
மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, எமன் மென் டோன்கா ஆகியோரும் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர். 8-வது சுற்றின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
சுலோவெனியாவை சேர்ந்த எபடோசிவ் விளாமிர் 5 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணா 4 புள்ளியும், மெண்டோன்கா 2.5 புள்ளியும், எரிகேசி 2 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவு சென்னை வீராங்கனை ஆர்.வைஷாலி 8-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஆர்தர் பஜ்பர்சுடன் டிரா செய்தார். அவர் 4.5 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
- போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன்.
- வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர்.
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் தொடரின் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நோடிர்பெக் விளையாடினார். இந்தப் போட்டி துவங்கும் முன் நோடிர்பெக் வைஷாலிக்கு கை குலுக்க மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பகிரப்படும் வீடியோவில் நோடிர்பெக்-க்கு எதிரான போட்டி துவங்கும் முன்பு வைஷாலி அவருக்கு கை குலுக்க முன்வந்தார். எனினும், நோடிர்பெக் வேண்டாம் என்று அப்படியே அமர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதை அடுத்து நோடிர்பெக் நான் வைஷாலியை அவமதிக்கும் நோக்கில் அப்படி செய்யவில்லை என்று கூறினார். மேலும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அன்பான செஸ் நண்பர்களுக்கு, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், நான் மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."
"முன்னதாக 2023-ல் திவ்யாவுடனான போட்டியின் போதும், இது போன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ, அதைதான் செய்வேன். நான் மற்றவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் கை குலுக்க வேண்டாம் என்றோ, பெண்களை ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ கூற மாட்டேன். என்ன செய்ய வேண்டுமென்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்."
"இன்று பல்மகாவிடம் நான் அதை கூறினேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார். அரங்கிற்கு வந்ததும், நான் அப்படி செய்யக் கூடாது என்றும், குறைந்தபட்சம் வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான போட்டி துவங்கும் முன் என்னால் அவர்களிடம் இதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலையாக மாறிவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.
- இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
- குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்திரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியன் சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளளூரை சேர்ந்த ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்கொண்டார். நீண்ட நேரம் நீடித்த நிலையில், இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. இந்த தொடரில் குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா செர்பியாவை சேர்ந்த அலெக்சியை 29-வது காய் நகர்தலுக்கு பிறகு தோற்கடித்தார். இது அவரது 5-வது வெற்றியாக அமைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார்.
12 சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய இருவரும் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். இன்று நடைபெறும் 13-வது மற்றும் இறுதி சுற்று போட்டி சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் தோற்றனர். வைஷாலி 5 புள்ளியுடன் 11-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 3 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- பிரக்ஞானந்தா செக் குடியரசு வீரர் டாய் வென்னை வீழ்த்தினார்.
- பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.
பிராக்:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் கெய்மரை வீழ்த்தினார்.
- பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.
புதுடெல்லி:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைச் சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா செய்துள்ளார். இதன்மூலம் மற்றொரு இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.