என் மலர்
நீங்கள் தேடியது "சிட்கோ"
- நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் ‘அடல்சேது’ கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மும்பை:
நவிமும்பையில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நவிமும்பை விமான நிலையம்- தானே இடையே 26 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிட்கோ (நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம்) திட்டமிட்டுள்ளது.
மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் 'அடல்சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவிமும்பை விமானநிலையத்தை தானேயுடன் இணைக்கும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திகா பத்னி மைதானம் அருகில் உள்ள தான் நிரான்கரி சவுக்கில் இருந்து வாஷி பாம் பீச் வரை 17 கி.மீ.க்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.
அதன்பிறகு பாம் பீச் ரோட்டில் இருந்து நவிமும்பை விமான நிலையத்துக்கு நேரடியாக இரட்டை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது.
- கப்பலூர் சிட்கோ பகுதியில் குப்பைகளை சரிவர அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- இதில் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில்
500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிட்கோ இதுவாகும்.
கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
இங்கு பஞ்சுக்கழிவுகள், துணிமூடைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் உள்ளிட்டவை ேசர்ந்து காணப்படுகின்றன.
இது குறித்து சிட்கோவில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசன் கூறுகையில், கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் பஞ்சாயத்தாக உச்சப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவைப் பொறுத்தவரை பராமுகமாக இருந்து வருகிறது. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.
இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில்அதிபர் சங்கத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. குப்பைகள் அதிகமாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், மின்கட்டணம் செலுத்துதல், மாசுபரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை அள்ள வருவதில்லை. சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர்.
இது சம்பந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கிதருவாக கூறியுள்ளார் என்றார்.