என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைடிஷ்"

    • முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துளிர் முருங்கைக் கீரை - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 8

    புளி - நெல்லிக்காய் அளவு

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5 பல்

    கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.

    10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

    இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ஈரல் - 500 கிராம்

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    வர மிளகாய் - 5

    மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - இரண்டு கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கனை ஊறவைக்க...

    சிக்கன் லெக் பீஸ் - 7

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    சோள மாவு - 1 டீஸ்பூன்

    மைதா - 1 டீஸ்பூன்

    எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

    சாஸ் செய்ய

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    பூண்டு - 2 பல்

    இஞ்சி - 2

    சிவப்பு மிளகாய் - 2

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    வெங்காய தால் - கார்னிஷ் செய்ய

    செய்முறை

    பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை, சோள மாவு மற்றும் மைதா மாவு போட்டு நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.

    ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு மசாலா சிக்கனை சேரும் படி 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    இறுதியாக, அதில் வெங்காய தாள் தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் லாலிபாப் மசாலா ரெடி.

    • பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 300 கிராம்

    ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 2

    தக்காளி - 6

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - அரை தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 5

    இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை

    கிராம்பு

    பச்சை ஏலக்காய்

    கருப்பு ஏலக்காய்

    அன்னாசி பூ

    பிரியாணி இலை

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

    கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..

    இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/4 கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    குடைமிளகாய் - சிறியது 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    தக்காளி - 2

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    வறுத்து அரைப்பதற்கு...

    மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய - 3

    பட்டை - 1 இன்ச்

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

    * பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

    * இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.

    • இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.

    தேவையான பொருட்கள்

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு பல் - 3

    புளி - நெல்லிக்காய் அளவு

    உப்பு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    செய்முறை

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    • இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த முட்டை - 5

    வெங்காயம் - 2

    தக்காளி - 3

    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க

    உப்பு - சுவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும்.

    வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும்.

    பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.

    பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

    பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!.

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • நாண், இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சப்ஜியில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பன்னீர் - 150 கிராம்

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    உருளைக்கிழங்கு - 1

    குடைமிளகாய் - 1/2

    காலிஃபிளவர் நறுக்கியது - அரை கப்

    பட்டாணி - 1/2 கப்

    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    பிரெஷ் கிரீம் - 1/2 கப்

    கசூரி மெதி, கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, குடை மிளகாய், காலிஃபிளவர், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்

    • தோசை, இட்லிக்கும் தொட்டு கொள்ள அருமையான இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 6

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்

    மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மசாலா தயார்!

    • மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
    • புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ

    சிறிய வெங்காயம் - 6

    மல்லி - 1/2 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 10

    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

    எலுமிச்சை - 1

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.

    அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.

    • வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
    • இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 2 கட்டு,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 2,

    இஞ்சி - ஒரு துண்டு,

    காய்ந்த மிளகாய் - 8,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - சிறிதளவு,

    கறிவேப்பிலை

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.

    ×