என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்து மகளிர் காவல் நிலையம்"
- மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.
அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.
இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை சார்பில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.அதன்படி வளசர வாக்கம், போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, வண்டலூர், காட்பாடி, திருவண்ணாமலை, ஊரகம், திட்டக்குடி, கரூர்ஊரகம், கோட்டைப்பட்டினம், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, மேட்டுப்பாளையம், பெருந்துறை, ஊத்தங்கரை, ஊமச்சிக்குளம், திண்டுக்கல் ஊரகம், பெரியகுளம், முது குளத்தூர், சேரன்மாதேவி, புளியங்குடி ஆகிய 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.