என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராணம் ஏரி"

    • பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது.
    • விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்ம ன்னார்கோவில் லால்பேட்டை அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் மற்றும் சென்னை மக்களுக்கு குடிநீர் காட்டிய பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையை முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னார்கோவில் மற்றும் ஏரி அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பொது மக்களின் நலனுக்காக வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    வீராணம் ஏரி 47.50 இதன் மொத்த கொள்ளளவு ஆகும். தற்போது தினமும் வீராணம் எரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 64 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக 1897 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பயன்பா ட்டின் தேவைக்காக சேத்தியா தோப்பு வி. என். எஸ். மதகு வழியாக 431 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தற்போது வீராணம் ஏரி 45.70 கொள்ளளவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
    • கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

    எனவே, வீராணம் ஏரி கடந்த மாதமே முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதன் பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. அதோடு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.

    எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 47.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே ஏரிக்கு வரும் உபரிநீரான 2 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சாலியத்தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராதவிளாகம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், வடமூர், தெம்மூர், பரிவிளாகம், சிவாயம், பொன்னாந்திட்டு, நாஞ்சனூர், குமராட்சி, கொளக்குடி, திருநாரையூர், அண்ணாமலை நகர், அண்ணாநகர் உள்பட 30 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

    • கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது. இதனைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நீர்வரத்து, மழை இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் சரிந்தது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 47 அடியை எட்டி நிரம்பியது. ஏரிக்கு 15,154 கனஅடி நீர் வருகிறது. ஏரியில் இருந்து வடவாறு வழியாக 1,319 கனஅடி நீரும், வி.என்.எஸ் மதகு வழியாக 1,075 கனஅடி நீரும், சென்னை குடிநீருக்காக 65 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

    வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம்.
    • மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று வீராணம் ஏரியாகும். இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது.

    காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அதிலிருந்து தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம். இது தவிர மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.

    அதன்படி, தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக 14.95 கனஅடி நீர் வருகிறது. மேலும் கிளை வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளவான 47.50 அடியை நிரப்பாமல் ஏரியின் பாதுகாப்பு கருதி 46.50 அடி நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வீராணம் ஏரி இந்த ஆண்டு 6-வது முறையாக நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்குமேயானால் வெள்ளியங்கால் ஓடை, வி.என்.எஸ். மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். வீராணம் ஏரியினை சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை இன்று காலை எட்டியது.
    • வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்தது.

    மேலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.

    இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை இன்று காலை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது.

    கடலூர்:

    வீராணம் ஏரி வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஏரியை சுற்றி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதியை பெற்று வருகிறது. கோடை வெப்பம் காரணமாக தற்போது வீராணம் ஏரி வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை.

    அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரும். ஏரி வறண்டு வருவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகம் வர தொடங்கி உள்ளன. அவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து தின்று வருகிறது. வீராணம் ஏரி வறண்டு வருவதால் அப் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
    • வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது. 

    தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது.
    • இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரி மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கிருந்து சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தில் குடிநீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது. இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.

    கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் 4 அடி தேக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.

    வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    இதனால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 56 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.

    • வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்ட மிகப்பெரிய நீராதாரம் ஆகும்.

    இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்டங்களில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கடும் வெயிலால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் நீர் மட்டம் குறைந்தது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மழை மற்றும் மேட்டூர் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வருகிறது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 42.50 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள விவசாய பாசன வசதிக்கு தண்ணீர் திறப்பது பற்றி விவசாயிகள் கூட்டம் நடத்தி அவர்கள் தெரிவித்த பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
    • கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.

    ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.

    வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் படிப்படியாக கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் ஏரியில் திறக்கப்பட்டு தற்போது 45.10அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வருகிற திங்கட்கிழமைக்குள் ஏரி முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகள் நடைபெறாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    • வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    • ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடைமடை டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    பாசன வசதிக்காக பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 32 மதகுகள் உள்ளது. இந்த ஏரியை நம்பி கடைமடை டெல்டா பாசன பகுதியான காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    டெல்டா பாசன பகுதியான கந்தகுமரன், நெடுஞ்சேரி, புத்துார், கண்ணங்குடி, மதுராந்தகநல்லுார், பன்னப்பட்டு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் ஆடி மாதத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து தற்போது இல்லாத நிலையில், கடும் வெயிலால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. சென்னைக்கு 454 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது முளைவிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், தண்ணீர் திறப்பதை திடீரென ஒத்தி வைத்தனர். இதனால், ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    வேறு வழியின்றி நெற்பயிர்கள் கருகிய பகுதிகளில் விவசாயிகள் மறு உழவு செய்து விதைப்பு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கருகி வருவதை தடுக்க நேரடி நெல் விதைப்பிற்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×