என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிமலை"

    • இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
    • சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

    இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஆஸ்கார் மீடியாஸ் மேனேஜிங் டைரக்டர் சாய்மோகன் பாலாஜி, மீனாட்சி பாலாஜி மற்றும் குடும்பத்தினர் உணவு வழங்கினர்.

    • ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் ஆறுபடை வீடுகளின் நான்காம் படை வீடாக திகழக்கூடிய சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகோவிலில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக இரவு பகல் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொ ரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சி யுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    ×