என் மலர்
நீங்கள் தேடியது "தேங்காய் ஏலம்"
- மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
- பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.
போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
- பூஜிக்கப்பட்ட தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் பழமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7 நாட்களாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கந்தசஷ்டி விரதம் தொடங்கிய நாளில் இருந்து திருக்கல்யாண வைபவம் வரை பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
கும்ப கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை செயல் அலுவலர் ஏலம் விட்டார். அதனை போடியை சேர்ந்த சுபிக்ஷா என்ற பெண் ரூ.66 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். இதற்கு முன்பு கடந்த வருடம் இதே கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.27 ஆயிரத்திற்கு ஒரு பக்தர் ஏலம் எடுத்தார். இதனைதொடர்ந்து கோவிலில் அதற்குரிய பணத்தை கட்டி தேங்காயை அவர் பெற்றுக்கொண்டார்.
பூஜிக்கப்பட்ட தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி பூஜையில் வைக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் ஏலம் விடப்பட்டது. அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னிமலைல்:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 701 தேங்கா ய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது.
- மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் கொடு முடி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 3,300 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 66 காசுக்கும், அதிக பட்ச விலையாக 25 ரூபாய் 80 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 5 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 27 ஆயிரத்து 98 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் தேங்காய் பருப்பு 162 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 82 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 12 காசுக்கும் ஏலம் போனது.
இதே போல் இரண்டாம் தரம் குறைந்த பட்ச விலையாக 60 ரூபாய் 89 காசுக்கும், அதிக பட்ச விலையாக 80 ரூபாய் 20 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 6,992 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 901 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை முத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்த வாரம் 3 விவசாயிகள் தேங்காயும், 2 விவசாயிகள் தேங்காய் பருப்பும் கொண்டு வந்திருந்தனர்.
விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ 22.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 21.40 ரூபாய்க்கும், சராசரி 21.80 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 ஆயிரத்து 400 க்கு ஏலம் போனது. இது போல வாரந்தோறும் நடைபெறும் கொப்பரை ஏலத்தில் 350 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. இந்த ஏலத்தில் 2 விவசாயிகள் பங்கேற்றனர்.
வழக்கமாக இங்கு நடைபெறும் ஏலத்திற்கு குறைந்தது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உரிக்க முடியாமலும், தேங்காய் பருப்புகளை வெயிலில் காயவைக்க முடியாத காரணத்தால் 5 விவசாயிகள் மட்டும் ஒழுங்குமுறை கூடத்திற்கு விற்பனை செய்ய வந்திருந்தனர்.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 7 ஆயிரத்து 699 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 16 ஆயிரத்து 167 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 32 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 41 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 7 ஆயிரத்து 699 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் அரச்சலூர் அவல்பூந்துறை உள்ளிட்ட அப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 13 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 39 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 34 ரூபாய் 34 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 72 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 33 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், அதிகபட்ச விலையாக 29 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.
- வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
- மொத்த தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
மொத்தம் 3,280 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக ரூ.24.54 முதல் ரூ.25.52 வரை விலை போனது.
சராசரி விலை ரூ.25.29-க்கு விற்பனையானது.
மொத்தம், 1,366 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.
- வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 27 ரூபாய் 79 காசுக்கும், சராசரி விலையாக 26 ரூபாய் 52 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,692 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.42 ஆயிரத்து 109 விற்பனையானது.