என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மாபேட்டை"

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
    • மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.

    குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.
    • நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா நெருஞ்சிப்பேட்டை குண்டாங்கல் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் குருவரெட்டியூர் அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ளது.

    அங்கு சிறிய அளவில் கொட்டகை மற்றும் கம்பி வேலி அமைத்து அதில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு சேவல் மற்றும் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் கோழிகளை இரவு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று

    விட்டார். இதையடுத்து காலை தோட்டத்திற்கு வந்தார். அப்போது, கோழிகள் ஆங்காங்கே உயிரிழந்த நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்ததுள்ளன. இதனை கண்டு விவசாயி முருகேசன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஆரியாகவுண்டனுார் வி.ஏ.ஓ. வீரமுத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறும் போது,

    இந்த பகுதியிவல் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து சுற்றிலும் கம்பிவேலி போட்டு கட்டு சேவல், நாட்டுக்கோழி வளர்த்து வருகிறேன். இதை தொடர்ந்து கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.

    கம்பிவேலிக்கு அடியில், துளையிட்டு உள்ளே நுழைந்த நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.

    மேலும் இதுகுறித்து கொளத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோழிகளை வெறிநாய் கடித்ததா அல்லது மர்ம விலங்குகள் ஏதேனும் கடித்ததா என்பது குறித்தும், சேலம் மாவட்டம் கொளத்தூர் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.

    இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
    • நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.

    மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ×