என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் அறிக்கை"
- 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும்.
- மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை டன்னுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றது. தி.மு.க. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் ஆதார விலையோடு சேர்த்து 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும். 2025-2026-ம் ஆண்டு கரும்பிற்கான ஆதார விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும். இரண்டையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
- விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.
இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.
கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.
மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.
காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம் அளிக்கப்படும்.
- 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கம் என மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் புகார்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் ரோமியோ எதிர்ப்புப் படை அமைக்கப்படும்.
பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.
இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளனர்.
- எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
- பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிலங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியது போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுவும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது என்பது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்றும், எந்தவிதமான கட்டண உயர்வையும் அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சரை தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும்.
இதையடுத்து தேர்தலை சந்திக்க ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் பொங்கலுக்கு பிறகு குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க.வில் 3 குழுக்கள் அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒரு குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு குழுவும் என்று மொத்தம் 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொகுதி பங்கீடு குறித்து பேசும் குழுவுக்கு தலைவராக இருப்பார். 6 பேர் அதில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமாறு:-
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா.
இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தலைமை-கனிமொழி கருணாநிதி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் அதில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுக்களுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அஜய்குமார் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தி.மு.க.வுடன் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்.
அதன் பிறகு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குழுக்கள் சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும். அடுத்த வாரம் இந்த குழுக்கள் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப் போது தி.மு.க.-காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெளிவாக தெரிய வரும்.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் கனிமொழி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்) (தலைமை), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது.
- திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
- வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா கூட்டணி'யில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.
அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ. அப்துல்லா எம்.பி. எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதன் தொடக்கமாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி தற்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கலாமா? அல்லது வேறு நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? என்பது பற்றியும் அறிய முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிலவரம் எவ்வாறு உள்ளது? எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை உள்ளது என்பதையும் முதலில் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவழைத்து தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை மதியம் 3 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை வரவழைத்து கருத்து கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
அதன்பிறகு 27-ந்தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கருத்து கேட்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக 5-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.
அதன் பிறகு 40 தொகுதிகளுக்கும் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற பட்டியலை தி.மு.க. தலைவர், முதலமு.க. ஸ்டாலின் கவனத்துக்கு இந்த குழு கொண்டு செல்லும். அதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலமே உள்ளதால் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பேசும்போது பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் போட்டியிட அதிக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தார்.
இப்போது வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப்பிறகு கனிமொழி எம்.பி. கூறியதாவது:
வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும்.
அதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த ஊர்களுக்கு பயணம் செய்து எந்தெந்த கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்போகிறோம் என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.
எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.
அமைப்புகளின் கருத்துகளை பெற மின் அஞ்சல், அலைபேசி எண்கள் ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும்.
தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதாநாயகியாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
- இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
- தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.
இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
- அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
- ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த குழுவினர் வருகிற 5-ந்தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.
அதன்படி பிப்ரவரி 5-ந்தேதி தூத்துக்குடி, 6-ந்தேதி கன்னியாகுமரி, 7-ந்தேதி மதுரை, 8-ந்தேதி தஞ்சாவூர், 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந்தேதி திருப்பூர், 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந்தேதி விழுப்புரம் செல்கிறார்கள்.
அதன் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கருத்து கேட்க உள்ளனர்.
தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
அதன் பிறகு ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.