என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா அயர்லாந்து தொடர்"

    • இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கேப்டனாக செயல்பட்ட கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 10-ந் தேதி ராஜ்கோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் கேப்டனாக இருந்த கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேனுகா சிங் தாகூருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரிச்சா கோஷ் மற்றும் உமா செத்ரி விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே.

    • அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
    • இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

    அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் களமிறங்கினர்.

    இதில் சாரா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உனா ரேமண்ட்-ஹோய் 5, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 9, லாரா டெலானி 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    இதனையடுத்து கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் லியா பால் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    லியா பால் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லூயிஸ் 92 ரன்னில் தீப்தி சர்மா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

    • இந்திய தரப்பில் பிரதிகா ராவல், தேஜல் ஹசாப்னிஸ் அரை சதம் விளாசினர்.
    • அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.

    அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். தொடக்க இருந்தே மந்தனா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து பிரதிகா மற்றும் தேஜல் ஹசாப்னிஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பிரதிகா சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி 34.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 370 ரன்களை குவித்தது.
    • இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது.

    இந்தியா சார்பில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 73 ரன்களையும், மற்றொரு துவக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 67 ரன்களை அடித்தார். அடுத்து களமிறங்கிய ஹல்ரீன் தியோல் 89 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களை விளாசினார்.

    இதையடுத்து 371 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய அயர்லாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையான கேபி லூயிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் கேபி லீவிஸ் 12 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ்டினியா நிதானமாக ஆடி 80 ரன்களை சேர்த்தார்.

    மற்ற வீராங்கனைகள் நிதானமாக ஆடிய போதிலும், 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பறியுள்ளது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி 80 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    • ஸ்மிருதி மந்தனா 80 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார்.அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    • அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    • இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளை படைத்துள்ளார்.
    • 87 பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி அதிகவேக சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 87 பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை மந்தனா முறியடித்துள்ளார்.

    ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதங்கள் அடித்த வீராங்கனைகள்

    70 ஸ்மிருதி மந்தனா vs அயர்லாந்து, 2025

    87 - ஹர்மன்ப்ரீத் கவுர் vs தென் ஆப்பிரிக்கா, 2024

    90 - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ஆஸ்திரேலியா, 2017

    90 ஜெமிமா ரோட்ரிக்ஸ் vs அயர்லாந்து, 2025

    98 - ஹர்லீன் தியோல் vs வெஸ்ட் இண்டீஸ், 2024

    மேலும் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 10 சதங்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.

    மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் வீராங்கனைகள்

    15- மெக் லானிங்

    13- சுசி பேட்ஸ்

    10- டாமி பியூமண்ட்

    10- ஸ்மிருதி மந்தனா

    9- சாமரி அதபத்து

    9 சார்லோட் எட்வர்ட்ஸ்

    9 நாட் ஸ்கைவர்-பிரண்ட்

    • 17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக செயல்படுவார். காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி கவனம் பெற்ற மகாராஷ்டிர மாநில வலதுகை பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்.

    இந்திய அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

    ×