என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடைகளால்"
குமாரபாளையம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலை டிவைடர் வைக்கப்பட்டு மிகவும் குறுகியதாக உள்ளது. இதில் கடைகள் முன்பு வைக்கப்படும் ஸ்டாண்டிங் போர்டுகள், நிறுத்தப்படும் வாகனங்கள், ஆகியவற்றால் ஏற்கனவே விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாடுகள், ஆடுகள் ஆகியவை சாலைகளில் திரிந்து வருகின்றன. வாகனங்களின் ஹாரன் சத்தத்தால் இவைகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
இது போன்று கால்நடைகளை சாலைகளில் நடமாட விடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.