என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.1 lakh"

    • வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
    • பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
    வீ.கே.புதூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி, பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பென்சிங் வேலி அமைக்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்சத்தினை, தெற்கு மாவட்ட செயலாளர்  சிவபத்மநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி மருத்துவர் சுபா, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி,  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன்,  அட்மா சேர்மன் காந்திராமன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், தர்மராஜ், ராஜேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, அருள் டால்டன், சொட்டு சுப்பிரமணியன், கபில்தேவதாஸ், மாஸ்டர் கணேஷ், குருசிங், முத்துபாண்டி, டேனியல், ஸ்டீபன் சத்தியராஜ், கார்த்தி, காலசாமி, சாலிமேரி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×