என் மலர்
நீங்கள் தேடியது "Wildlife survey work"
- களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
- பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வருகிற 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் தானியங்கி கேமிராக்களை கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி 12-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 13-ந் தேதி நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி (காலை மற்றும் மாலை) நடக்கிறது.
14-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 15-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும்,
16-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்களும், 17-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.
தொடர்ந்து 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தானியங்கி கேமிரா பொருத்தும் பணிகள் நடக்கிறது. 27-ந் தேதி முதல் தானியங்கி கேமிரா கண்காணிக்கும் பணி நடக்கிறது.
28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தானியங்கி கேமிரா அகற்றும் பணிகளும், 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை புகைப்பட கருவிகளை கொண்டு செல்லுதலும் நடக்கிறது. தொடர்ந்து போட்டோ தரவுகளை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில் வனவி லங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அப்போது அவர்களுக்கு பல்ேவறு ஆலோசனைகளை வழங்கினர். வன உயிரின கணக்கெ டுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும். களப்பணியாளர்கள் அவரவர்களுக்கு உரிய சீருடையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வன உயிரினக் கணக்கெடுப்பு பணியின் போது ஓய்வு எடுக்கும் இடம், உணவு அருந்த அமரும் இடம் பாதுகா ப்பானதாக இருக்கின்றதா? என்பதனை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அதாவது நான்கு திசைக ளில் வன உயிரினங்கள் வந்தால் எளி தில் அறிய கூடிய வகையில் நான்கு திசைகளிலும் பார்க்ககூடிய வண்ணம் பாதுகாப்பினை உறுதி படுத்தி களப்ப ணியாளர்கள் அமரவே ண்டும்.
வன உயிரின கணக்கெடு ப்பு பணியின் போது செல்போன்களை பயன்படு த்திக் கொண்டு நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் வன விலங்குகள் அருகில் இருந்தால் அதனை நம்மால் உணர இயலாமல், பாதுகா ப்பற்ற சூழ்நிலைகள் உருவாக்ககூடும் என்பது உள்பட ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் குளிர் காலத்தில் யானை ,புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் கடக்க கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்புப் பணி கடந்த 24 ந்தேதி தொடங்கியது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:-
கணக்கெடுப்பு பணிக்கு ஏதுவாக உடுமலை அமராவதி வனச்சரகங்கள், மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனசரகங்களில் உள்ள 34 சுற்றுகளில், 53 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டது.
வனப் பணியாளர்கள், செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதல் மூன்று நாட்களில் சுற்றுகளில் காணப்பட்ட புலி சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப் பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்பட்ட இரை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள் குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரில் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளன்றுவனக் கணக்கெடுக் கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு கோவையில் உள்ள கள இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர்கள் சிவகுமார், சுரேஷ், முருகேசன் உள்ளிட்ட வர்கள், மற்றும் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். கணக்கெடுப்பு பணியின் போது யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தையின் காலடி தடம் உள்ளிட்டவை நேரடியாக பார்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.