என் மலர்
நீங்கள் தேடியது "கோரிக்கை"
- அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லாமலும், வடிகால்வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கியும் கானப்படுகிறது. மேலும் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்படாமல் தெரு ஓரம் மற்றும் குளக்கரைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிர் வருகின்ற மழைக்காலத்திற்குள் சாலைகள் அமைத்தும், வடிகால்வாய்க்கால் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கரூர் - வாங்கல் சாலையில்
கரூர்,
கரூர் -வாங்கல், நாமக்கல் மோகனூர் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே, 2016ல் புதிய உயர் மட்ட பாலம் கட்டப்பட் டது. இதனால், மோகனூரில் இருந்து, கரூர் நகருக்குள் நாள் தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனூர் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்கின்றனர். வாங்கல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. மேலும் மணல்கள், சென்டர் மீடியன் ஓரம் குவிந்துள்ன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வரு கின்றனர்.எனவே, கரூர் சாலையில் போதிய மின் விளக் குகள் அமைக்க, சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.
- குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
- பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், வேலைக்கு செல்வோர், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்தபடிதான், செல்ல முடியும். மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே தாமதம் செய்யாமல், மின் கம்பத்தை சுற்றி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கலெக்டரிடம் மனு அளித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வடக்குமாதவி 8-வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் பயன்படுத்தி வந்த தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
- மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது
- இதனால் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெரியோர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மருத்துவக் குழுவினருடன் சேர்ந்து ஆலங்குடி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடுதல் பஸ் வசதி இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும்
கரூர்:
கரூர் மாவட்டம், கடவூர் பஞ்சாயத்து யூனியன், காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின், பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்த பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவியர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்துள்ள வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
- இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வேப்பாடி ஆறு அரை கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. கடந்த ஓராண்டாக ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தும், சேமிப்பதற்கான அணைக்கட்டுகள் எதுவும் இல்லாததால் பாசனத்திற்கு பயன்தராமல் நீர் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்ட எல்லையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலை குன்றுகளில் உற்பத்தியாவது வேப்பாடி ஆறு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள சேர்வராயன் மலை குன்றுகளில் வேப்பாடி ஆறு உருவாகி ஆனைமடு என்ற இடத்தில் இருந்து தருமபுரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்து 40 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் சேலம் மாவட்ட எல்லைக்குள் சென்று விடுகிறது.
தருமபுரி மாவட்டம் வழியாக வேப்பாடி ஆறு சென்றபோதும், இம்மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், எந்தப் பயனும் இல்லை. எனவே மாவட்ட எல்லையில் உள்ள ஆணைமடுவு என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் பொம்மிடி, பில்பருத்தி,கேத்தி ரெட்டிபட்டி, துறிஞ்சிப்பட்டி, ஒட்டுபள்ளம், கொண்டகரஹள்ளி, ஜாலியூர், சில்லாராஹள்ளி, மோடாங்குறிச்சி, தாளநத்தம், வாசி கவுண்டனூர், பள்ளிப்பட்டி என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1936-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஆணைமடு நீர் தேக்கம் கட்டுவது குறித்து அன்றைய சென்னை மாகாணத்தில் வேப்பாடி அணை நீர்த்தேக்க கோப்புக்கள் விவாதிக்கப்பட்டு, அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும், அப்பகுதியை பார்வையிட்டு, இயற்கையாகவே அணை கட்டுவதற்கான பள்ளத்தாக்கு பகுதியும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளதை ஆய்வு செய்துள்ளனர்.
அணைக்கட்ட நில அளவை செய்தும் பின்பு திடீரென திட்டத்தை செயல்படுத்த முடியாமல் விட்டு விட்டனர் அதற்கான கல்வெட்டும் ஆணைமடுவு பகுதியில் தற்போதும் உள்ளது.
பின்னர் 1941-ம் ஆண்டு இந்த அணைக்கட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கே.எம்.புதூர், ஆர்.எம்.நகர் பொதுமக்கள் வேண்டுகோளின் படி இரு ஏரிகளுக்கு ஆற்று நீரை எடுத்து செல்ல பாம்பு கால்வாய் என்ற பெயரில் புதிய கால்வாய் சுமார் பத்து கிலோமீட்டர் வெட்டப்பட்டு ஏரிகளுக்கு நீர் எடுத்துச் செல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த ஏரிகளுக்கு கடந்த 70 ஆண்டு காலமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் இத்திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டி வேப்பாடி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.
ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.
மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.
எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
- சாலையில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
- குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்
கரூர்:
கரூர் நகரில் சுற்றி திரியும் மனநலம் பாதிக் கப்பட்டவர்களை, அவர் களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர், கல்யாண பசுப தீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்து வமனை, ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை வெங் கடரமண சுவாமி கோவில், சாய்பாபா கோவில் உள் ளிட்ட பகுதிகளில், மன நிலை பாதிக்கப்பட்ட வர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.
இவர்களில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கோவை சாலையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் ஓடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். மற்ற பகுதிகளிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல், கரூரில் சுற்றிதிரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- கழிவு நீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- சாலையில் ஆறாக ஓடுகிறது.
கரூர்:
கரூர் அருகே, படிக்கட்டு துறை பகுதியில் சாக்கடை வாய்க்கால் செல் கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கழிவு நீர் வாய்க்காலில், புதர்கள் மண்டியுள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. மேலும் மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் மழைக்காலங்களில் சாலையில் ஆறாக ஓடி தேங்கி நிற்கிறது. எனவே, சுகாதார கேட்டை தடுக்க, படிக்கட்டு துறை பகுதியில் செல்லும், சாக்கடை வாய்க்காலை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செட்டிகுளத்தில் புதிதாக தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் முன்பு தொடங்கி குன்னுமேடு குடியிருப்பு வழியாக சிற்றேரி கடைகாலுக்கு செல்லும் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த தாா் சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.
மேலும் போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.