என் மலர்
நீங்கள் தேடியது "இன்று"
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
- கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் அந்தந்த துறைகளின் சார்பில் பதிலளித்திருந்தனர்.
கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-
கடலோர கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி வாக்காளர் எண்ணிக்கையை முறைப் படுத்த வேண்டும், கன்னியாகுமரி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை உள்ள ஏ.வி.எம். சானலை தூர்வார வேண் டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்ப டாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே அதிகாரிகள் வந்து கூறுகி றார்கள்.
பெரிய காடு மீன வர் கிராமத்தில் போடப் பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்து தர வேண்டும். பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம் கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதிகாரிகள் பேசி யதாவது:-
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை போடப்பட்டு இன்னும் ஒப்பந்த முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த ஒரு முறையான உத்தரவும் இன்னும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வரப்பெற்றால் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடத்திச் சென்ற ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
- குமரி போலீசார் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியான மற்றொரு மாணவியும் திடீ ரென ஒரே நாளில் மாயமானார்கள்.
இது தொடர்பாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 மாணவிகளையும் தேடி வந்தனர்.
அப்போது மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது இருவரும் ஒரே எண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது, அது திருவட்டார் குட்டக்குழி காலனி பகுதியைச் சேர்ந்த வினு (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான வினுவை தேடிச் சென்ற போது, அவரும் வீட்டில் இல்லை. எனவே அவர் தான் 2 மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என ேபாலீசார் கருதினர்.
இதையடுத்து பினுவின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த னர். இதில் அந்த எண் சென்னை திருவான்மியூரில் இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 மாணவி களுடன் வினு இருப்பது தெரிய வந்தது. மாணவி களை மீட்ட போலீசார், அவர்களையும் வினுவையும் குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் 2 மாணவிகளும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2 மாணவி களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வினு தனது வலையில் வீழ்த்தியதும், பின்னர் 2 பேரையும் ஓன்றாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும் ரவுடி வினு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதனை மாணவிகளிடம் கூறாமல் அவர்களுடன் பழகி வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரவுடி வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ள தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மாணவி களும் இன்று மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- இரவு 7.45 மணிக்கு பரிகார பூஜைகள் நடத்தி மீண்டும் திறக்கப்படுகிறது
- இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
- கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமிஅன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமியான இன்று குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.பின்னர்எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வர ருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
- கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்
கன்னியாகுமரி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.
உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.
அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
- கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் எந்தவித பார பட்சமுமின்றி அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டது. இன்று வடசேரி அaண்ணா சிலை முதல் புத்தேரி மேம்பாலம் வரை உள்ள அசம்பு ரோட்டில் அனைத்து ஆக்கிர மிப்புகளும் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.
கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. மேலும் மழைநீர் வடிகால் மேல் மீது உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.
- தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
- நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில்:
தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசோலை வழக்குகள், விபத்து காப்பீடு வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய 5 நீதி மன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள் முருகன் தொடங்கி வைத்தார்.
முதன்மை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, குற்றவியல் நீதிபதி தாயு மானவர், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காசோலை வழக்குகள், காப்பீடு தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் இன்று 2084 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஆதார் எண் இணைப்பதிலும் வாக்காளர்கள் ஆர்வம்
- வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் பணி கள் முடிவ டைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பெயர் சேர்த்தல் மட்டுமின்றி நீக்கம் செய்தல் திருத்தம் போன்ற பணிகளும் முகாமில் செய்யப்பட்டன. எனவே பலரும் முகாமில் பங்கேற்றனர்.
புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வத்துடன் வந்தனர். இதனால் அனைத்து முகாம்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஏற்கனவே அறிவு றுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பலரும் ஆதார் எண்ணை இணைத்து வரு கின்றனர். குமரி மாவட் டத்தில் இதுவரை 69 சதவீதம் பேரே வாக்கா ளர் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்ப திலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாளை(13-ந் தேதி)யும் இந்த முகாம் நடக்கிறது,
- சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
- படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
கன்னியாகுமரி:
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு
- இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுவும் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழையின் வேகம் 2 நாட்கள் குறைந்து காணப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் நேற்று மாலை மீண்டும் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர்வி ளையில் 55.2 மில்லி மீட்டரும் இரணியலில் 42 மில்லி மீட்டரும் குருந்தன்கோட்டில் 36.2 மில்லிமீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 41.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 69.68 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. இந்த நிலையில் காலை 9.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில், சாமிதோப்பு, கொட்டாரம் என பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலக பணிக்குச் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
- படகுகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
- தீவிரவாதிகள் போல் தப்பிசெல்ல முயன்ற 4 பேர் பிடிபட்டனர்
கன்னியாகுமரி:
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீ சாரும் இணைந்து "சீ விஜில்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நேற்று நடத்தினர்.
இன்று 2-வது நாளாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியா குமரி முதல் குளச்சல் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதான புரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்த மான சோதனை சாவடி களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கன்னியா குமரி கடலோர பாது காப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான படையினர் கன்னியா குமரி வாவத்துறை கடற்கரை பகுதி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கடற்கரை வழியாகதீவிரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் யார்? என்பது தெரிய வந்தது. அதில் 2 பேர் கமாண்டோ படையைச் சேர்ந்த போலீ சார் என்பதும் ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் எஸ்.பி.எப்.கமாண்டோ படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கடல் வழியாக படகில் தப்பி செல்ல முயன்ற அவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புகுழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி னார்கள்.
குளச்சல் கடற்கரை சோதனைச்சாவடியில் மரைன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார், சட்டம் ஒழுங்கு சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த வழியாக சென்ற கார், ஆட்டோ, பைக் மற்றும் மீன் லாரிகள் ஆகியவற்றையும் தீவிர சோதனைக்கு பின்பே கடற்கரையில் அனுமதித்தனர்.இதனால் அப்பகுதியில் வாகனம் ஓட்டி வந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ெரயில் நிலையத்திலிருந்து இன்று அரசு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். செட்டிகுளம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென பஸ்ஸின் மீது கல்வீசினார்.
இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.அந்த வாலிபர் அந்த பஸ்ஸின் பின்னால் வந்த மற்றொரு பஸ் மீதும் கல்வீசி தாக்கினார். அந்த பஸ்ஸின் கண்ணாடியும் உடைந்தது. இரு பஸ்களின் கண்ணாடியும் உடைந்ததையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் எதற்காக கல்வீசி பஸ்சை உடைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இரண்டு பஸ்களில் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் கோட்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.