என் மலர்
நீங்கள் தேடியது "இன்று"
- 2 பேர் படுகாயம் அடைந்தனர்
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.
இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது.
- கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ. 49¼ கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் இந்தரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலைய மேம்பட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் 26-ந்தேதி கன்னியாகுமரி ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாகத்தில் நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து பிரதமர் மோடி இந்த ரெயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ரூ. 49¼ கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு நவீனமயமாக இருக்கும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தனி ரெயில் மூலம் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ. 49¼ கோடி செலவில் நடைபெற இருக்கும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து காட்சிபடுத்தப்பட்டிருந்த விளக்க படங்களை பார்வை யிட்டார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் விரி வாக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ரெயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் தனி ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
- போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
- ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
நாகர்கோவில்:
நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாம் இன்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர் குழுவினர் ரத்தான முகாமில் பங்கேற்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், இது மிக முக்கியமான நிகழ்வாகும். ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. போலீசார் தற்பொழுது ஆர்வமாக வந்து ரத்ததானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
- வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
- இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.
இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
- கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்க ப்பட்டு,சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார்.இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவின் 15-ம் நாளான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
- நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
- போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
- சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும்.விலங்குகள் சரணாலயம், யானைகள் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூர்வீக பழங்குடி அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.
தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு குமரி மாவட்ட குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.செயலாளர் வேலப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பினு குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மணி,ராஜேந்திரன், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் .இதனால் போலீசாருக்கும் பழங்குடி மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து மனு அளித்தனர்.
- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவ ட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்ட அகில பாரத இந்து மகா சபாவினர், காசி, மது ராவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோ வில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
ஆனால் இதற்கு போலீ சார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அந்த பகுதி யில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிர மணியன் தலைமையில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ், குமரி கோட்ட செயலாளர் ஸ்ரீகண்டன், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர்கள் ராஜ சேகர் (கிழக்கு), சபரி குமார் (மேற்கு) உட்பட பலர் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு திரண்டனர். போலீஸ் கூடுதல் சூப்பி ரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட இந்து மகா சபா நிர்வாகிகளை கைது செய்தனர். கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
- கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
- இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறும் வகையில் கொடி நாள் நிதி திரட்டப்படு கிறது. இந்த நிதி உயிர் நீத்த படை வீரர்களின் மனைவிகள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் வசூல், ரூ.1 கோடியே 14 லட்சத்து 52 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலை மாவட்ட கலெக்ட ரும் மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவருமான அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு அடையாள கொடியை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன் அணிவித்தார்.
தொடர்ந்து போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர் நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியில் இருந்து கருணை தொகை ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 2 ஆண்டு கள் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளதாகவும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் நிதியை வாரி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ரூ.40 ஊதிய உயர்வு வழங்கப்படும்
- அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை என 4 கோட்டங்களாக ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்க 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஓப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை செயல்படுத்த ரப்பர் தோட்டக் கழகம் தாமதம் செய்ததால், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் 7-ந் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், தொழிற்சங்க த்தினருடனான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடை பெற்றது. நள்ளிரவை தாண்டியும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
அதன்படி ரூ.40 ஊதிய உயர்வு உள்பட அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும். மேலும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதிக்கு முன்பும், 2-ம் தவணை வருகிற 23-ந் தேதிக்கு முன்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பணியா ளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அவர்கள் 7-ந் தேதி (இன்று) முதல் வேலைக்குச் செல்வதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை அவர்கள் பணிக்கு வந்தனர். 30 நாட்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது.
- காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மை யானது ஆகும்.
இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக் கான திருவிழா இன்று (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெற்றது.அதைத்தொடர்ந்து காலை 8மணிக்குநேர்ச்சை கொடிகள் பவனிதொடங்கி யது. மாலை 4 மணி வரை இந்த நேர்ச்சை கொடிகள் பவனிநடக்கிறது. மாலை 6.30 மணிக்குதிருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல் ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.
2-ம் நாள் திருவிழாவான நாளை (10-ந்தேதி) அதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப் பலி நடக்கிறது. தொடர்ந்து 10-30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6-30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக் கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்ப லியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறார்.தொடர்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரை யாற்று கிறார்.
தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.இந்ததேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தைசேர்ந்த ஏராளமானஇறைமக்கள் கலந்துகொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப் பாளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக்மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவை யினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 200 பேர் கைது
- ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் போராட்டம் நடத்துவதற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.
மாநில கலை இலக்கிய துணை செயலாளர் அமலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் டார்வின் தாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், ஜெபஸ்டின், தெற்கு மண்டல தலைவர் நலன் குமார், மகளிர் அணி செயலாளர் சந்திரா, தொண்டரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ரதீஷ், எபனேசர், பாபு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு போராட்ட க்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.