என் மலர்
நீங்கள் தேடியது "6th"
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் தரை தளத்தில் அமைய வேண்டும்.
இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
இருப்பினும் குறிப்பிட்டபடி அடுத்த மாதம் 6-ந்தேதி அதே இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.