என் மலர்
நீங்கள் தேடியது "Academic Year"
- புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந் தேதி முதல் துவங்குகிறது.
- வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை :
புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந்தேதி முதல் துவங்குகிறது. மாணவர்களை வரவேற்க வழக்கமாக முதல் சில நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு மாற்றாக விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதும், கதைகள் கூறுவதுமாக துவக்கப்பள்ளிகளில் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:- கல்வியாண்டு துவங்கியதும் முதல் 2 வாரங்கள் வரையிலும் அவர்களின் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவு கூர்ந்து அதற்கான செயல்முறைகளை எளிமையாக நடத்துவதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய பாடங்களை திடீரென நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருப்பதால் இவ்வாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
- கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
- அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை.
அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.
அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் முதலே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.