என் மலர்
நீங்கள் தேடியது "ஜோகோவிச்"
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
- இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மியாமி:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜாகுப் மென்சிக் 7-6 (7-4) மற்றும் 7-6 (7-4 ) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக மென்சிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- அரையிறுதியில் ஜோகோவிச் - டிமித்ரோவ், ஃப்ரிட்ஸ் - மென்சிக் மோதுகின்றனர்.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருக்கிறார்.
தற்போது ஜோகோவிச் வயது 37 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. முன்னதாக ரோஜர் ஃபெடரர் தனது 37 வயது ஏழு மாதங்கள் இருக்கும் போது இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி தொடர்களின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வயதான வீரர் என்ற சாதனையாக இருந்தது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஜெசிகா பெகுலா 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அர்ஜென்டினாவின் கமிலோ உகோ காரபெல்லி ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மற்றும் ரஷ்யாவின் அன்னா நிகோலாயெவ்னா கலின்ஸ்காயாவும் மோதினர். இதில் 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
- நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.
1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.
- இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
- இதில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அடிலெய்டு:
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,
தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார். சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்பெலசை எளிதில் வென்றார்.
- இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பெரெட்னியை வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்பெலசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னியுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 , 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்தார்.
- ஜோகோவிச், முர்ரே ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார். இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பல்கேரியா வீரரை வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ரஷியாவின் ஆண்டி ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4 - 6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் ஜோகோவிச், ரூப்லவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச்,ரஷிய வீரரான ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், அமெரிக்காவின் டாமி பால், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் டாமி பால் 7-6, 6-3 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-5 என ஷெல்டன் கைப்பற்றினார். 4வது செட்டை டாமி பால் 6-4 என கைப்பற்றி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.