என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ்குமார், மாநில அளவிலான கபடி போட்டியிலும், மாணவர் வெங்கடேஷ், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்‌ பட்டுள்ளனர். இந்த இரு மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி, தில்லையம்பலம், ஆசிரியர் முனிரத்தினம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொடுத்து வரும் ஊக்கத்தினால், தொடர்ந்து முறையாக பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அளவில் சாதனை படைப்போம் என, மாணவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14, 15, 16 -ந்தேதிகளில் காலை, மாலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை இடைத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தேர்வுகள் துறை செய்து வருகிறது.

    • பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
    • 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
    சேலம்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர். 

    சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து  நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.  மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை  படிக்கும் விதமாக  கடந்த 27-ந்தேதி முதல்  இன்று வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
    ×