என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women’s"

    • ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தில் மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
    ராஜபாளையம்

    உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவைகள் நடைபெற்று வருகின்றன.  

    இவற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற சேவை நிறுவன அமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பயிற்சி மற்றும் கையெழுத்து இயக்கம் தனியார் திருமண மண்டபத்தில்   நடைபெற்றது. 

    ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமை தாங்கினார். வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட அலுவலர் பால சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தைகள் நலக்குழு, சைல்ட் விஷன் போன்ற அமைப்பை சேர்ந்தவர்களும், காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். 

    முடிவில் இதற்கான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பிரதானமாக வைக்கப்பட்டிருந்த பலகையில் அனைவரும் கையெழுத்திட்டனர். மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
    ×