என் மலர்
நீங்கள் தேடியது "விஸ்வ இந்து பரிசத்"
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கிடசாமி தலைமை வகித்தார். திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தென் பாரத அமைப்பாளர் பாலு சரவண கார்த்திக் பேசினார். இதில் ஜல்லிக்கட்டு மற்றும் கோவில் யானை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயகணேஷ், விஎச்பி ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகர தலைவர் அருண், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் சரவண துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தியில் தற்போது நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விஎச்பி தலைவர் சரத் சர்மா கூறியுள்ளதாவது:
ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப் படுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருவறை சன்னதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
ஜூன் 1-ம் தேதியை கருவறையின் முதல் கல் அங்கு நாட்டப்படும். ராமர் சிலை நிறுவப்படும் புனிதமான பகுதி சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்படுகிறது.
உத்தர பிரதேச துணை முதல்வர், ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் ராமர் சிலை மீது விழும் வகையில் கோயில் கட்டப்பட்டு வருவதாக ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.