என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன"

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிரறது. சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்தாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. சூறைக்கற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, ஏற்காடு - நாகலூர் சாலையில் ராட்சச சவுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    இதன் காரணமாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி மட்டும் வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால், சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மின்கம்பி மீது மரம் விழுந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல், அங்கே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு   மழை பெய்தது.

    கன மழை  
    குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் வயல் வெளிகள் மற்றும் தாழ்வான பகுதி–களில் தண்ணீர் தேங்கியது.  கோடை காலத்தில்   பெய்த மழை   விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9  மணியளவில்  தொடங்கிய மழை  லேசான தூறலுடன்  நின்று போனது. இதனால் மழை வரும் என்று எ திர்பார்த்த  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது . இதனால் பொது   மக்கள் நிம்மதியாக  தூங்க முடிந்தது.
      
    மாவட்டத்தில்  அதிக பட்சமாக வீரகனூரில் 48 மி.மீ.  மழை பெய்துள்ளது. கெங்கல்லி 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 5, சங்ககிரி 1.2, ஆத்தூர், சேலத்தில் 1 மி.மீ.  என மாவட்டம் முழுவதும் 81.2 மி.மீ. மழை பெய்தது. இன்று காைல மாவட்டம் முழுவதும் வெயில அடித்த படி இருந்தது.
    ×