என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palalayam"

    • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • இன்று பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயம் உறையூர் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரசுவாமி கோவிலாகும். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி அளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இங்கு வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகயை சிறப்பு வாய்ந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் பாலாலயம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, விமானம் கலாகர்ஷணம் முதல்கால யாகபூஜை, பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கடத்தில் இருந்து சித்திர படத்தில் பாலாலயம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
    • அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.

    அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் அ.குன்னத்தூரில் எட்டு பட்டி கிராமத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற   உள்ளது. 

    அதன் காரணமாக கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் சாமி சிலைகளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலத்திற்காக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

     இதில் புரோகிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் செய்து யாகம் வளர்த்தனர். பின்னர் சிறப்பு பூஜையுடன் அம்மன் உட்பட சாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு சாமி சிலைகளையும் எடுத்து அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×