என் மலர்
நீங்கள் தேடியது "உணவுத்திருவிழா"
- தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
- நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.
தொண்டி
தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
- மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளார் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் குத்துவிளக்கேற்ற, நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கம்பு அடை, கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயிறு, நவதானிய இனிப்பு உருண்டைகள், கொண்டைக்கடலை, சோள தோசை மேலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என 100-க்கும் மேற்பட்ட அறுசுவை உணவு வகைகள் மற்றும் 54 வகையான பழ வகைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த உணவுத் திருவிழாவில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக கலந்து கொண்டு தங்களுக்கான பிடித்த உணவை சுவைத்து உண்டு கண்டுகளித்தனர்.
சிறந்த முறையில் உணவு சமைத்து வந்த மாணவ, மாணவிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வழங்கினார்கள்.
விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஷ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
- சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.
தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-
தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.
தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.
- பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.
- உணவுத் திருவிழாவில் மொத்தம் 286 வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
- கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினாவில் கடந்த 20-ந்தேதி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உணவுத் திருவிழா தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முழுக்க முழுக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கைப்பட சமைத்து வழங்கும் உணவுகளே இங்கு விற்பனை செய்யப்பட்டது.
உணவுத் திருவிழாவில் ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, தருமபுரி ரவா கஜூர், சாமை வெண்பொங்கல், தினை இனிப்பு பொங்கல், கிருஷ்ணகிரி கம்பு பாயாசம், ஈரோடு அடை அவியல், சேலம் தட்டு வடை, கார பொறி, சிவகங்கை நெய் சாப்பாடு- சிக்கன் கிரேவி, வேலூர் ராகி புட்டு, ராகி கொழுக்கட்டை, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, கன்னியாகுமரி பொரிச்ச பழம், கிழங்கு மீன் கறி உள்ளிட்ட உணவு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். மொத்தம் 286 வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
உணவுத் திருவிழா டிக்கெட் கவுண்ட்டர்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று சென்றனர். உணவு வழங்கும் அரங்கிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் வாங்கி விரும்பி சாப்பிட்டனர்.
இந்நிலையில் மெரினாவில் கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினரின் ரூ.1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள், உணவுகளை வாங்கி உள்ளனர்.
45 அரங்கங்களில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள், ஆயத்த உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.